Saturday, October 2, 2010

SAW - 3D யில் மிரட்ட வருகிறது! - பார்க்கும் துணிவு உங்களிடம் இருக்கிறதா?


திகில் விரும்பிகளுக்கு ஒரு குஷியான தகவல். SAW-3D (சாவ்-3D) வரும் அக்டோபர் 29 ம் திகதி உலகெங்கும் ரிலீஸ் செய்யப்படுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
அண்மையில் இதற்கான ட்ரெயிலரையும் பட போஸ்ட்டரையும் வெளியிட்டார்கள். ஜப்பான் நகர்த்தெருக்களை அலங்கரிப்பதற்கு பதில், இவை
பயமுறுத்தும் விதமாக ஒட்டப்பட்டிருப்பதாக ஜப்பானிய ரசிகர்கள் கூறியிருந்தனர். ஏனெனில் புகழ் பெற்ற mosaic தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு சிறிய புகைப்படங்களை ஒன்றிணைத்து Final Poster ஐ பிரமாண்டமாக உருவாக்கியிருந்தார்கள்.
தற்போது எல்லா நாடுகளுக்கும், இதே தொழில்நுட்பத்தில் போஸ்ட்டர்கள் அச்சடித்து விநியோகம் செய்து வருவதுடன், சாவ் புரோமோவுக்காக திரைப்பட குழு ஒவ்வொரு நாட்டுக்கும் பயணிக்கத்தொடங்கியுள்ளது.

ஹொலிவூட் திரைப்பட வரலாற்றில் அருவருக்கத்தக்க உச்சகட்ட பயங்கர திரைப்படத்தொடராக 'சாவ்' வர்ணிக்கப்படுவதுண்டு. சாவ் 1-7 வரை வெவ்வேறு காலகட்டத்தில் ஒரே திரைக்கதையுன் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது. பல நாடுகளில் தடை, 18 வயதுக்குட்பட்டோர், இதயம் பலவீனமானோர் பார்க்கவே முடியாத திரைப்படம், என பல்வேறு நெருக்கடிகளையும் தாண்டி, வசூலில் அள்ளிக்குவித்துவிடும் இதன் ஒவ்வொரு பாகமும்.

இதை முடிக்கவே மாட்டார்களா? என சாவ் ரசிகர்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருந்த படம், 8 வது பாகத்துடன் முடிகிறது என அறிவிக்கப்பட்டது. ஆனால் காட்சிப்படுத்தலின் வரையறையை தாண்டிவிட்ட ஹாலிவூட் திரையுலகில் சாவ் இன் இறுதிப்பாகத்தை மட்டும் எப்படி சும்மா காட்டலாம் என யோசித்த இதன் இயக்குனர் கெவின் க்ரௌவ்தெத், முதன் முதலாக முப்பரிமாண திரைப்படமாக இதை தயாரித்திருக்கிறார். முப்பரிமாண 3டி போஸ்ட்டரை காண இங்கு அழுத்துங்கள்
சாவ்வின் இறுதிப்படமும் இதுவே. சாவ்வின் முதல் முப்பரிமாண திரைப்படமும் இதுவே. பொதுவாக, சாவ்வின் முன்னைய தொடர்களை தியேட்டரில் பார்க்கவே  ஆசைப்பட்டனர் ரசிகர்கள். காரணம் உச்சகட்ட ஒலிப்பிண்ணலுன், ஒளிப்பிண்ணலும் திகில் நிறைந்ததாக முழுத்திரையையும் அச்சத்தால் உறையவைத்திவிடும்.
அப்படியென்றால் இத்திரைப்படம் 3டியில் வந்தால் எப்படியிருக்கும் என்ற கேள்வி நமக்கு எழமுன், அவர்களே அதை ட்ரெயிலரில் காட்டிவிடுகிறார்.
இதோ அக்டோபர் 29ம் திகதிசாவ் திரைப்படத்தை, 3டி கண்ணாடி அணிந்து பார்க்கப்போகும், நீங்களும்  இப்படித்தான் பார்க்கப்போகிறீர்கள்...!

எச்சரிக்கை : facebook “Like” இனூடாக வரும் வைரஸ்

facebook இணைய தளத்தில் காணப்படும் “Like” பட்டனினூடாக வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றதாம். Javascript ன் துணையுடனேயே இது செயற்பட்டுவருகின்றது. “Shocking! This girl killed herself after her dad posted this photo.” இந்த வாசகத்துடைனையே இந்த வைரஸ் பரவிவருகிறது.
“Shocking! This girl killed herself after her dad posted this photo.” எனும் வாசகத்தை click செய்யும் போது தானகவே குறிப்பிட்ட இந்த வாசகத்தை ‘Like’ செய்து உங்கள் ‘wall’ இலும் இந்த வாசகத்தை போட்டுவிடும். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான facebook பயனாளர்களை தொல்லை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேற்குறிப்பிட்ட வாசகத்துடன் ஏதேனும் வந்தால் ,அதனை click செய்ய வேண்டாம்

சந்தையைக் கலக்கும் Nokia C5, E5

இன்றைய நிலவரப்படி புதிய செல்போன் வாங்க நினைப்பவர்கள் முதலில் கேட்கும் கேள்வி, 3 ஜி வசதி இருக்கிறதா என்பதுதான். அத்துடன் ஜிபிஎஸ், வைஃபை, க்வெர்டி கீபோர்டு போன்ற தொழில்நுட்பங்களும் கிடைக்குமா என்று ஆசைப்படத் தொடங்கிவிட்டனர்.
ஆனால் விலையைக் கேட்டபிறகு பாதிபேர் பின்வாங்கிவிடுகின்றனர். நோக்கியாவின் 2 புதிய வெளியீடுகள் இந்த நிலைமையை மாற்றியிருக்கின்றன. அதில் ஒன்று C5 மற்றொன்று E5.
3ஜியின் முக்கிய வசதியே இணையப் பயன்பாடுதான். சி5 மற்றும் இ5 ஆகிய இரண்டு மாடல்களும் 10.2 எம்பிபிஎஸ் வேகம் வரை இணையத் தொடர்பை அளிக்கின்றன. சேவை அளிப்பவர்கள் அந்த வேகத்தில் இணைப்பை வழங்க வேண்டும் அவ்வளவுதான். சி5ல் வைஃபை வசதி கிடையாது. இ5-ல் இந்த வசதி இருக்கிறது.
இதில் சி5 மிகவும் எளிமையான வழக்கமான தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இ5 மிகவும் நவீனமான க்வெர்டி கீபோர்டு வசதியுடன் வந்திருக்கிறது. இதில் இ5-ல் விடியோ கால் கேமரா கிடையாது. ஆனால், வேறுபல வசதிகள் இ5-ல் அளிக்கப்பட்டிருக்கின்றன.
சி5-ல் 128 எம்பி ராம் மெமரியும் இ5-ல் 256 எம்பி ராம் மெமரியும் உள்ளன. இந்த வசதியால் இந்த இரு போன்களுமே மிக வேகமாகச் செயல்படுகின்றன. அதேபோல் சி5-ல் 50 எம்பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் இ5-ல் 250 எம்.பி செகன்டரி ஸ்டோரேஜ் மெமரியும் உள்ளன. கூடுதலாக 2 ஜிபி மெமரி கார்டு வழங்கப்படுகிறது. சி5யில் 3.2 மெகாபிக்சல் கேமராவும் இ5-ல் 5 மெகாபிக்சல் கேமராவும் உள்ளன.
சி5 ஸ்கீரின் 16 மில்லியன் வண்ணத்திறனும் இ5 ஸ்கிரீன் 256கே வண்ணத்திறனும் கொண்டிருக்கின்றன. இ5-ல் குறைந்த வண்ணத்திறன இருப்பதால் பெரிதாக வேறுபாடு ஒன்றும் தெரியவில்லை.
இரு போன்களிலுமே ஜிபிஎஸ் வசதி இருக்கிறது. ஏபிஜிபிஎஸ் சேவையும் கிடைக்கும். நீங்கள் இருக்கும் இடத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வகை செய்யும் கூகுள் லாட்டிட்யூட் சேவை இரு போன்களிலுமே மிக அருமையாகச் செயல்படுகிறது.
செல்லும் இடங்களிலெல்லாம் இணைத்தை மேய நினைப்போருக்கு இ5 போனும், விடியோ கால் வசதி கண்டிப்பாக வேண்டும் என நினைப்போருக்கு சி5 போனும் சிறந்தது.

ஐ.நா.அறிக்கை: 'அமெரிக்க குடிமகனை இஸ்ரேல் படுகொலை செய்தது'

மே 31 காஸாவிற்கு உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்ற மாவி மர்மரா என்ற நிவாரணக் கப்பல் இஸ்ரேலிய படையினரால் தாக்கப்பட்டது. அந்தக் கப்பலில் இருந்த தொண்டர்கள் பலர் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

"நிவாரணக் கப்பலில் இருந்தவர்கள் பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகவும், அதனால் தற்காப்புக்காக சுட்டதாகவும்" இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நியாயப்படுத்தியது.

தற்போது ஐ.நா. மனித உரிமைகள் கமிஷன் (United Nations High Commissioner for Human Rights) நியமித்த உண்மை கண்டறியும் குழு சம்பவத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தாக்குதலில் கொல்லப்பட்ட தொண்டர்களின் பிரேத பரிசோதனை முடிவுகளை வைத்து இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டது. பிணங்களின் மீது காணப்பட்ட காயங்களை வைத்து பார்க்கும் பொழுது, அவர்கள் மிக அருகாமையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாகின்றது. மரண தண்டனை நிறைவேற்றும் பாணியில் இந்தப் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக 19 வயது (துருக்கி வம்சாவளி) அமெரிக்க பிரஜையான டோகனின் மரணம் சந்தேகத்திற்கிடமின்றி படுகொலை என நிரூபிக்கப் பட்டுள்ளது. அந்த இளைஞன் கப்பலின் மேல் தளத்தில் நின்று கொண்டு வீடியோ எடுத்துக் கொண்டிருந்த போதே சுடப்பட்டான். முதுகிலும், காலிலும் காயம் பட்டு சுயநினைவின்றி விழுந்து கிடந்தான். அதன் பிறகே பிடரியிலும், முகத்திலும் சுட்டதால் அவனது உயிர் பிரிந்துள்ளது.
ஐ.நா. அறிக்கை வருவதற்கு முன்னமே துருக்கி அரசு டோகனின் பிரேத பரிசோதனை முடிவுகளை அமெரிக்க தூதுவராலயத்திற்கு வழங்கி இருந்தது. தூதுவராலயம் அமெரிக்க நீதி அமைச்சுக்கு அனுப்பியிருந்தது. அதன் பிறகு எந்த செய்தியும் இல்லை. நீதி அமைச்சு இது குறித்து கருத்துக் கூற மறுத்து வருகின்றது. ஒரு அமெரிக்க குடிமகன் இஸ்ரேலிய படையினரால் படுகொலை செய்யப்பட்ட போதிலும், ஒபாமா நிர்வாகம் எல்லாம் தெரிந்தும் மௌனமாக இருக்கிறது. இஸ்ரேலுடனான உறவு பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இஸ்ரேலிய படையினரின் மனித உரிமை மீறல்களை கண்டும் காணாதது போல நடிக்கிறார்கள்.

இன்று கூகிளில் தெரிவது - The Flintstones வயது ஐம்பது !


இன்று கூகிளின் தொடக்கப் பக்கத்தில்  தெரிவது  The Flintstones கார்டுன் படத்தின் 50வது ஆண்டு நிறைவின் வாழ்த்து. பிரபலமான விடயங்களுக்கு,  முதற் பக்கத்தில் வாழ்த்துத் தெரிவித்து வரும் கூகிளின் நடவடிக்கையில் இன்று  இந்த கார்டுன் படத்திற்குத் தெரிவித்துள்ளது.
1960ம் ஆண்டு  செப்டெம்பர் மாதம் 30ந்திகதி, அமெரிக்க ஒளிபரப்புக் கூட்டுத் தாபனத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஒளிபரப்பட்ட இந்தக் கார்டுன் சித்திரத்தின் முதற் தொகுதி,  தொடர்ந்து 6 வருடங்கள் அத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது. William Hanna, Joseph Barbera ஆகியோரின் படைப்பில், அவர்களது Hanna-Barbera Productions தயாரிப்பாக வெளிவந்தது.
1960களில் இருந்த அமெரிக்க வாழ்க்கைக் கனவினை, , கற்கால மனித சமூகத்தின் வாழ்க்கையோடு பொருத்திப்பார்த்தலில் பிறந்த நகைச்சுவைக் கதையினை மூலக் கதையாகக் கொண்டு இந்தக் கார்டுன் சித்திரம் வடிக்கப்பட்டது. இதனால் அச் சித்திரங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையுமே கவர்ந்து கொண்டது.  அந்த மூலவடிவமைப்பிலேயே  இன்று வரை அனைவரையும் கவர்ந்திழுத்து வருகிறது.
அக்காலத்தில் அமெரிக்கத் தொலைக்காட்சியின் பிரதான விளம்பரதாரர்களாக பெரும் கம்பெனிகள் திகழ்ந்து கொண்டிருக்க, இந்தக் கார்டுனுக்காக விளம்பரதாரராக 'வின்ஸ்டன்' சிகரட் கம்பெனி வந்தது. இதனால் இந்தத் தொடரின் தொடக்கத்திலும் முடிவிலும், இக் கார்டுனின் கதாபாத்திரங்கள் புகைபிடிப்பது போல் காட்சி அமைக்கப்பட. அது கடுமையான விமர்சனஙங்களுக்கும் உள்ளானது.
பறவைகள், மிருகங்கள், மனிதர்கள் என்ற கூட்டுப் பாத்திரப்படைப்பில் உருவான இந்தக் கதையில் 11 தொலைக்காட்சித் தொடர்கள், 3 சினிமாக்கள் வரை வந்துள்ளன. முதலாவது தொடர் மூன்று வண்ணத்தில் படமாக்கப்பட்டிருந்தது. கடந்த வருடத்தில் உலகின் மிகச்சிறந்த கார்டுன்கள் வரிசையில் இப்படத்திற்கு 9வது இடம் கிடைத்திருந்தது. உலகின் முக்கியமான தீம் பார்க்குகளிலும் இந்தக் கார்டுன் பாத்திரங்கள் முக்கிய இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. அன்றிலிருந்து இன்று வரை The Flintstonesகார்டுனும், கதாபாத்திரங்களும் மாறாத குதுகலம்தான்.
கடந்த வாரத்தில் கூகிளும் தனது 10வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டுபாயில் ஒரு கூலிப் பணியாளின் தினசரி வேலை!


டுபாயின் ஜுமெரியா கடற்கரையோரம், வானுயர்ந்து நிற்கிறது அக்கட்டிடங்கள். சுமார் 400 அடி உயரத்தில், 34 வது மாடியில் உள்ள ஒருவருக்கு தன் ஜன்னல் கதவுகள் அழுக்காக இருப்பது பிடிக்கவில்லை. தொலைபேசியை கையில் எடுத்தார். அடுத்த செக்கன் அங்கு வந்து நின்றான் ஒரு கூலிப்பணியாளி! அடுத்து என்ன நடந்திருக்கும் என உங்களுக்கு தெரிந்திருக்கும்.
ஆனால் இப்படித்தான் நடந்திருக்கும் என நினைத்துகூட பார்த்திருக்க மாட்டீர்கள். எதிர்மாடி வீட்டில் வசிப்பவரரொருவர் படம்பிடித்த காட்சி இது.


உயிருக்கு உத்தரவாதம் அவர் தன் ஒரு கையால் பிடித்திருக்கும் ஜன்னல் நிலைதான்! தலைக்கவசம் போன்ற வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதையும்  அவன் மேற்கொண்டிருக்கவில்லை.

ஜன்னலுக்கு வெளிப்புறம் தரை விளிம்பில் நின்று கொண்டு கண்ணாடியை துடைக்கின்றான். விழுந்தால் சுக்குநூறாக வேண்டியது தான்.

டுபாயில் சட்டவிரோதமின்றி, ஒழுங்காக பதிவு செய்து வேலைசெய்யும் பணியாளர்களின் நிலைகூட இப்படித்தான் என்கிறது இப்புகைப்படத்தை வெளியிட்ட லண்டன் இணையத்தளம் ஒன்று.

இவர் அரபு எமிரேட்ஸில் நீண்டகாலமாக வேலை செய்யும் பணியாளராக இருக்க கூடும். இவ்வேலை ஆபத்தானது என அவர் கருதி, விலகிவிடுவாரெனில், அல்லது தன்னை நடத்தும் விதம் குறித்து அரசுக்கு புகார் கொடுப்பாரெனில், நாட்டை விட்டுத்தான் போகவேண்டும் . ஏனெனில் எவ்வித முன் அனுபவமுமின்றி உயிராபத்தை கூட கவனத்திற் கொள்ளாது மிக குறைந்த சம்பளத்தில் இதேவேலையை எடுத்து செய்வதற்கு இன்னமும் 1000 பேர் வரிசையில் தயராக காத்திருக்கிறார்கள். என்கிறது அத்தளம்.
டுபாயில் பணிபுரியும் வெளிநாட்டவரில் எப்போதும் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள்! அங்கு  கூலிப்பணியாளராகப் பணிபுரியும் அவர்களில்,  உங்கள் நெருங்கிய உறவினர் கூட  இருக்க முடியும்! குறைந்த சம்பளத்தில், ஒரு நாளில் 30 மணிநேரம் வேலை செய்யக்கூறினாலும் அவர்கள் தயார் தான்!. இதையும் அந்த இணையத்தளம் தான் கூறியுள்ளது.
ஏன் அவர்கள் அப்படித் தயாராகின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போகலாம் ஆனால் உங்களுக்கு....?
(தாயகம் பிரிந்து தூர தேசப் பணிகளில், நம் உறவுகளின் துயரங்களைப் பகிர்ந்த கொள்ளும் நோக்கிலேயே இச் செய்தி இங்கு பகிரப்பட்டுள்ளது)

2013ஆம் ஆண்டில் பாரிய சூரிய தீச்சுவாலைகளினால் பூமி முடங்கும் அபாயம்

2013 ஆம் ஆண்டு சூரியனில் ஏற்படும் பாரிய வெடிப்பொன்றினால் வெளிவரக்கூடிய பாரிய தீச்சுவாலைகள் காரணமாக பூமியில் மின் விநியோகம் முதலானவை தடைப்பட்டு பாரிய சிக்கல்கள் ஏற்படலாம் என விஞ்ஞானிகள் நேற்று எச்சரித்துள்ளனர்.
நூறு வருடங்களுக்கு ஒரு தடவை இத்தகைய பாரிய வெடிப்பு சூரியனில் ஏற்படலாம் எனவும் இனிமேல் இவ்வாறு ஏற்பட்டால் ஐரோப்பா அமெரிக்கா உட்பட உலகின் பல பகுதிகளில் மின்விநியோகம் துண்டிக்கப்படுவதுடன் தொலைதொடர்புத்துறை செயலிழப்பு, விமானங்கள் பறக்க முடியாத நிலை, இணையத்தளங்கள் செயலிழப்பு போன்றன ஏற்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
லண்டனில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாநாடொன்றில் உரையாற்றிய பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் லியாம் பொக்ஸ், அண்மைக்காலத்தில் 1859ஆம் ஆண்டு சூரியனில் ஏற்பட்டதற்கு ஒப்பான அளவில் பாரிய வெடிப்பொன்று மீண்டும் ஏற்பட்டால் அளவிட முடியாத சேதங்கள் ஏற்படலாம் என கூறினார்.
தொழில்நுட்பத்தில் தங்கியுள்ள நவீன சமூகம் இத்தகைய தாக்கங்களால் அதிக பாதிப்புகளுக்கு முகம்கொடுக்கும் அச்சுறுத்தலை எதிர்கொள்வதாக உள்ளது எனவும் இத்தகைய நாசங்களுக்கு எதிரான தந்திரோபாயங்களை விஞ்ஞானிகள் வகுக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

இன்னொரு சூரிய குடும்பம் : மனிதன் வாழ தகுதியுள்ள புதிய கோள் கண்டுபிடிப்பு

நமது சூரிய குடும்பத்தை போல ஏராளமான சூரிய குடும்பங்கள் வான வீதியில் உள்ளன. அதில் கிரிசி-581 என்ற சூரிய குடும்பம் 11 ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடிக்கப்பட்டது. இது பூமியில் இருந்து 20 ஒளி ஆண்டுகள் தூரத்துக்கு அப்பால் உள்ளது.
இதில் உள்ள ஒரு கோளை விஞ்ஞானிகள் 11 ஆண்டுகளாக ஆய்வு செய்து வந்தனர். நமது சூரிய குடும்பத்தில் சூரியனில் இருந்து பூமி எவ்வளவு தூரத்தில் உள்ளதோ அதே போல அந்த கோளும் அங்குள்ள சூரியனில் இருந்து இதே தூரத்தில் அமைந்துள்ளது.
இதனால் பூமியை போலவே சூரியனின் வெப்பம் இந்த கோளிலும் இருக்கிறது. எனவே இதில் தண்ணீர் மற்றும் ஆக்சிஜன் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஆகவே இந்த கோளில் உயிரினங்கள் வாழ வாய்ப்பு இருக்கிறது. மனிதன் அங்கு குடியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

பொய் சொல்பவர்களை கண்டுபிடிக்கணுமா?

மனிதர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகம். இதில் ஏய்த்து பிழைபவர்கள் ஏராளம். நல்லவர்கள் போல் பேசுவார்கள் இறுதியில் காலை வாரிவிடுவார்கள். நம்பிக்கையுடன் சீட்டுக் கட்டி, ஏமாந்தவர்களின் செய்தியை படிக்கிறோம்,
புன்னகை பூத்த முகத்துடன் அக்கா, அண்ணேன்னு உரிமையோடு பேசுகிறவரிடம் வாங்கிய பொருள் தரமற்றும், உடைசலாகவும் இருப்பதை பார்த்து மனம் புழுங்குகிறோம் இல்லையா?
இன்னும் எத்தனையோ விதங்களில் ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அதுபோன்ற போலி மனிதர்களை சந்திக்க நேரலாம். அவர்களை சாதுரியமாக கண்டுபிடித்து உங்களை பாதுகாத்துக் கொள்ள இதோ சில வழிகள்…
பொய் பேசுபவரின் பேச்சில் சில மாற்றங்கள் தென்படும். குறிப்பாக அவர்களின் சத்தத்தில் முன்பைவிட மாறுதல் இருக்கும். அவர்கள் பேசும் விஷயத்தில், பொய் வரும் இடத்தில் அழுத்தம் கூடுதலாக இருக்கும் அல்லது அதை திரும்பத் திரும்ப வலிறுத்தி பேசுவார்கள். வியாபாரிகள் என்றால் ஒரே விலையை குறி வைப்பதுபோல மீண்டும் மீண்டும் கூறுவார்கள். வேகமாகவோ அல்லது மெதுவாகவோ பேசுவதன் மூலம் அவர் சொல்ல வரும் விஷயத்தில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
ஆனால், `அல்லது, தவிர, அப்படியிருக்க’ போன்ற வார்த்தைகளை பொய் பேசுபவர்கள் தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் இதெல்லாம் அவர்களின் நோக்கத்தை தடுக்கும் வார்த்தைகள் என்பதை அவர்கள் நன்கு அறிந்து வைத்திருப்பார்கள். அவர்கள் `நான், எனக்கு, என்னுடைய’ போன்ற வார்த்தைகளையும் குறைவாக உபயோகிப்பார்கள். அதிகமாக கட்டுக்கதைகளைச் சொல்வார்கள், இணைப்பாக தங்களது சொந்த சங்கேத சொற்களையும் இடைஇடையே உச்சரிப்பார்கள்.
அவர்களிடம் எந்த விஷயத்தை பேசினாலும் நமக்கு சாதகமாக முடித்து தருவதுபோல் பதில் தருவார்கள். முகத்தில் புன்னகையை தவழ விட்டிருப்பார்கள். ஆனால் உங்களைக் கடந்து செல்லும் அடுத்த நிமிடம் `இரு உன்னை கவனிச்சுக்கிறேன்’ என்று மனதிற்குள் எண்ணியபடி நகருவார்கள். அப்படிச் செய்பவர்களை முக பாவனையை வைத்து எளிதில் கண்டு பிடிக்க முடியும். உணர்வுகளை மறைக்கும் தன்மை முகத்திற்கு கிடையாது. எவ்வளவு அடக்கினாலும் முகத்தில் லேசாக பிரதிபலிக்கும். உண்மை சிரிபுக்கும், போலி சிரிப்புக்கும் வித்தியாசம் உங்களுக்குத் தெரியும்தானே. அப்படியென்றால் அவர்களின் குட்டு உங்களிடம் எடுபடாது.
பொய்யர்கள் போலியாக சிரிப்பார்கள். அதை நன்றாக கவனித்தால் கண்டுபிடிக்கலாம். அதை நீங்கள் கண்டுபிடிப்பதுபோல் நடந்து கொண்டால் அவர்கள் இடத்தை காலி செய்ய தயாராகி நழுவ முயற்சிபார்கள். போலியாக சிரிப்பதுபோலவே பயப்படுவது, கோபப்படுவது, வெறுபதுபோல் நடிபது என்று எல்லாம் போலியாகவே செய்வார்கள்.
அவர்களின் நடவடிக்கை மற்றவர்கள் முன்பு ஒருவிதமாகவும், யாருமில்லாத இடத்தில் மற்றொருவிதமாகவும் இருக்கும். அவர்களின் மனநிலை முகத்திற்கும்- உடலுக்கும், பேச்சு- சப்தத்திற்கும் ஒட்டாமல் தொடர்பின்றி தொங்கிக் கொண்டிருக்கும்.
ஒரு சாதாரண விஷயத்தைச் சொல்ல வந்தாலும் அதில் சில விஷயங்களை மறைத்துவிடுவார்கள். அதே நேரத்தில் நீங்கள் ஏதாவது விவகாரமான கேள்வி கேட்டால் அதை கூர்ந்து கவனிப்பார்கள். ஆனால் தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் முகத்தை திருப்பிக் கொண்டு நிற்பார்கள்.
“இன்று உங்களுக்காக பொய் சொல்பவர்கள், நாளை அவர்களுக்காக உங்களையே ஏமாற்றத் துணிவார்கள்” என்று சொல்வதுண்டு. எனவே பொய் பேசுபவர்களிடம் கவனமாக இருங்கள்!

காதலில் வெற்றியீட்டிய குரங்கு ஜோடி (படங்கள் இணைப்பு)







சீனாவின் ஹெபேயி நகரிலுள்ள மிருகக்காட்சிசாலையில் 4 வயதான யங் யங் என்ற ஆண் குரங்கிற்கும் 6 வயதான வான் ஸிங் என்ற பெண் குரங்கிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. 

இந்த இரு குரங்குகளும் கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக மிருகக்காட்சிசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காதல் திருமணம் கிறிஸ்தவ முறைப்படி நடந்து.இந்த திருமணத்தில் காதல் ஜோடியின் சகப்பாடிகளும் பெருமளவான பொது மக்களும் கலந்து கொண்டனர்.

குறிப்பு: 2008ம் நடைபெற்ற திருமணம்

















இலங்கையின் 7 புராதன செல்வங்கள் (படங்கள் இணைப்பு)

கண்டி புனித நகரம்

அமைவிடம் : மத்திய மாகாணம் 
செங்கடகலபுர என்று பெயர் பெற்றிருந்த புனித பௌத்த தலம் சிங்கள அரசர்களின் கடைசி நகராகும். 1815 இல் இந்நகரரை பிரித்தானியர்கள் கைப்பற்றும் வரை 2500 வருடங்களுக்கு மேலாக இங்கு பௌத்த கலாசாரம் மேலோங்கி விளங்கியது. பிரசித்தி பெற்ற தலதா மாளிகை இங்கு உள்ளது. இது ஒரு பெயர் பெற்ற புனிதயாத்திரைத் தலமாக விளங்குகிறது. 

சிங்கராஐவனம்


அமைவிடம் : சப்ரகமுவ மற்றும் தென் மாகாணம்
இவ்வனம் இலங்கையின் தென் மேற்குப்பகுதியில் காணப்படுகிறது. நாட்டின் கடைசி உட்புகக் கூடியதாக அமைந்துள்ள பிரதான உக்ஷ்ணவலய மழைக் காடாகும். இங்கு காணப்படும் மரங்களில் 60 வீதமானவை மிகவும் அரிதாகக் காணப்படும் இனங்களாகும். இக்காடுகளில் ஏராளமான பறவை இனங்கள் பாலூட்டும் மிருகங்கள் பூச்சிவகைகள் ஊர்வன ஆகியன உள்ளன.


சிகிரியா புனித நகரம்

அமைவிடம் : மத்திய மாகணம் 
மாத்தளை மாவட்டம்

முதலாவது காசியப்ப மன்னன் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்நகரின் எச்சங்களை இன்றும் காணலாம். 370 மீற்றர் உயரமுள்ள கற்பாறை உச்சியிலும் மற்றும் செங்குத்தான பகுதிகளிலும் இதன் எச்சங்கள் உள்ளன. ஒரு சிங்கத்தின் வாயினூடாக உள்ளே செல்வதற்காக அமைக்கப்பட்ட படிகள் ஊடாக மேலே 

குகைக்கோவில்
 

அமைவிடம் : மத்திய மாகாணம் 
மாத்தளை மாவட்டம்
மாத்தளை மாவட்டத்தில் 22 நூற்றாண்டுகளாக புனித யாத்திரைத் தலமாக விளங்கும் புனித குகைக்கோவில் இதுவாகும். இக்கோவில் சிறப்பாகப் பேணப்பட்டு வருகிறது. இங்கு 157 புத்தர் சிலைகள் உள்ளன. அத்துடன் 2100 மீற்றர் தூரத்திற்கு புத்தருடைய பௌத்த ஓவியங்கள் காணப்படுகின்றன.


பொலநறுவை
 

அமைவிடம் : வட மத்திய மாகணம் 

பொலநறுவை மாவட்டம்
இலங்கையின் முதலாவது தலைநகரமாக இருந்த அனுராதபுரம் 993 இல் அழிக்கப் பட்ட பின்னர் இலங்கையின் இரண்டாவது தலைநகரமாக பொலநறுவை விளங்கியது. சோழர்களால் மட்டுமன்றி 12ஆம் நூற்றா ண்டில் 1ம் பராக்கிரமபாகுவால் உருவாக்கப்பட்ட ரம்மியமான நகரத்தின் எச்சங்கள் தற்போதும் காணப்படுகின்றன. இங்கு வியக்கத்தக்க கட்டடங்கள் மற்றும் சிற்பங்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன.


காலி நகரம்


அமைவிடம் : தென் மாகாணம் 

இந்நகரம் 16ம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்களால் உருவாக்கப்பட்டது. 18ம் நூற்றாண்டில் பிரித்தானியர்களின் வருகைக்கு முன்னர் அதன் அபிவிருத்தி உச்சகட்டமாக இருந்தது. தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஐரோப்பியர்களால் கட்டப்பட்ட கோட்டை அரண் நகரத்திற்கு இது சிறந்த உதாரணமாகும்.ஐரோப்பிய கட்டடக் கலையும் தெற்காசிய மரபுகளும் இதில் இணைந்து காணப்படுகிறது.

வை-மெக்ஸ் மயப்படுத்தப்படும் தென்கொரியா

  இண்டெல் மற்றும் கொரியா டெலிகொம் ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து தென் கொரியா முழுவதற்கும் வை-மெக்ஸ் எனப்படும் அதிவேக இணையச் சேவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளன. 

இதன் மூலமாக ஆசியாவின் முதல் வை-மெக்ஸ் நாடாக தென்கொரியாவை மாற்றவுள்ளதாக அந்நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. 

இதற்கென இண்டெல் நிறுவனம் சுமார் 20 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்துள்ளது.

வைமெக்ஸ் சேவைக்கு இணையான வைப்ரோ சேவையே கொரியாவில் வழங்கப்படவுள்ளது.

இச்சேவையின் மூலம் கொரியாவின் 85% இணையப் பாவனையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏற்கனவே இச்சேவை கொரியாவின் முக்கிய சில நகரங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. _

நோன்பு காலத்தில் உணவு விற்பனை : இரு பெண்களுக்கு நேற்று பிரம்படி

  புனித ரமழான் காலத்தில் உணவு விற்பனை செய்தமைக்காக இந்தோனேசியாவில் இரு பெண்களுக்கு நேற்று பொது இடத்தில் பிரம்படி வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியாவின் கடுமையான இஸ்லாமிய சட்டத்தினை பின்பற்றும் ஆச்சே மாகணாத்திலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

27 வயதான முர்னி அம்ரிஸ் மற்றும் 22 வயதான ருக்கியா அப்துல்லா ஆகியோருக்கு முறையே 3 மற்றும் 2 பிரம்படிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவ்விருபெண்களும் புனித ரமலான் மாதகாலத்தில் இஸ்லாமிய ' ஸரியா ' சட்டத்திற்கு முரணாக உணவு விற்பனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரியா சட்டத்தின் படி நோன்பு நோற்றிருக்கும் நேரத்தில் உணவு விற்பனைசெய்வது குற்றமென அம்மாநிலத்தில் உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவிக்கின்றார். 

சீனாவில் இரண்டு கால்களுடன் நடந்து வரும் பன்றி!

  இரண்டு கால்களுடன் மட்டுமே நடந்துவரும் பன்றி ஒன்று சீனாவில் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. 

10 மாதமேயான இப்பன்றி சூங் ஜியாங் குயாங் என அக் கிராமத்திலுள்ளவர்களால் செல்லமாக அழைக்கப்படுகின்றது.

பிறந்ததிலிருந்து இப்பன்றி 2 கால்களால் மற்றுமே வாழ்ந்து வருகின்றது.

இவ்வருடம் பிறந்த ஒன்பது பன்றிக்குட்டிகளில் இக்குட்டி மட்டுமே இவ்வாறு பிறந்ததாக அதன் உரிமையாளர் தெரிவிக்கின்றார்.

இதன் நிலையைக் கண்ட தனது மனைவி இதனை எறிந்து விடும்படி கூறியதாகவும் தான் அந்த யோசனையை மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

தற்போது இதன் நிறை 50 கிலோகிராம்கள் ஆகும். இதன் உரிமையாளரே இதற்கு நடைப்பயிற்சி வழங்கியுள்ளார்.

இதனை விலைக்கொடுத்து வாங்க பலர் முன்வந்ததாகவும் தான் அதனை மறுத்துவிட்டதாகவும் அவர் மேலும் தெரிவிக்கின்றார். 

கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறையும் வாய்ப்பு

 பெண்கள் ஒரு நாளைக்கு 4 கப் கோப்பி குடித்தால் அவர்களின் எடை குறைய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கோப்பி குடிப்பது என்பது உலகம் முழுவதும் பரவலாக நடப்பது ஒன்றாக உள்ளது. அதேபோல் பெண்களின் எடையை குறைக்க உதவும் ஒரு வழியில் இதுவும் ஒன்றாக உள்ளது.

இதற்காக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கடந்த 26 வருடங்களாக 86 ஆயிரம் நர்ஸ்களை கணக்கில் கொண்டு அவர்களை கண்காணித்தனர். ச்சரியப்படும் வகையில் அதிக அளவில் காபியை குடித்தவர்களுக்கு குறைந்த அளவே சதை போட்டிருந்தது. தினந்தோறும் 4 கப் கோப்பி குடித்து வந்த பெண்களில் 57 சதவீதத்தினர் குறைந்த அளவே எடை கொண்டிருந்ததையும், 2 முதல் 3 கப் கோப்பி குடித்தவர்களில் 22 சதவீத அளவே எடை குறைந்திப்பதையும் கண்டறிந்தனர். 
..