Wednesday, September 29, 2010
ஜலதோஷமா, உடல்வலியா, மூட்டுவலியா இல்ல ஹாங்க் ஓவரா ?
யு-டியூப்பில் காணொளி வலையேற்றுவது எப்படி?

விண்டோஸ் பிழைச்செய்தி இலக்கங்கள் சொல்வது என்ன? கண்டறியும் ஒரு இணையத்தளம்.
இதன் மூலம் விண்டோஸ் மட்டுமல்ல மேக் கணணியின் பிழைச்செய்தியையும் கண்டுபிடிக்க முடியும். இலக்கத்தை மட்டும் கொடுத்து இயங்கு தளத்தை தேர்வு செய்து எண்டர் தட்டினால் போதுமானது உடனே பிழைக்கான காரணம் தெரியவரும். தேவையாயின் டெஸ்க்டாப் அப்பிளிகேஷனும் கிடைக்கிறது பயன்படுத்தி பயன் பெறலாம்.
இணைய முகவரி - http://www.errorgoblin.com/
டவுண்லோட் செய்ய
உலகின் அதிஉயர குழந்தை : வயது இரண்டரை, உயரம் 4 அடி 5அங்குலம்! (பட இணைப்பு)
இரண்டரை வயதான இக்குழந்தையின் தற்போதைய உயரம் 4 அடி 5 அங்குலங்கள். 7 அடி 2 அங்குலமான இவரது தாயார் ஆசியாவின் உயரமான பெண்மணியென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனையாவர்.
இதே வயதையொத்த குழந்தைகளைவிட இவர் சுமார் 2 மடங்கு உயரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிறக்கும் போதே இக்குழந்தை 2 அடி உயரம் இருந்ததாகவும், தன்னை விட உயரமாக, தன் மகன் வளர்வான் எனவும் கரனின் தாயார் தெரிவித்துள்ளார்.
கரன் தினமும் 5 அப்பிள்கள் 10 தேக்கரண்டி தேன் போன்றவற்றை உண்கின்றான்.
காலையில் எழுந்தவுடனேயே உணவை பற்றிக் கேட்பதாகவும், எப்போழுதும் உண்ட வண்ணமே இருப்பதாகவும் இவரது தாயார் தெரிவிக்கின்றார்.
மணிக்கு 416.6 கி.மீ. வேகத்தில் மின்னலாக பறந்த சீன ரெயில்
இதன் மூலம் உலகிலேயே அதிவேக ரெயில் என்ற சாதனையை படைத்தது. தற்போது, அதை விட அதிக வேகமாக இயங்க கூடிய ரெயிலை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த ரெயில் ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி.மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.
இந்த ரெயில் மணிக்கு 350 கி.மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷாங்காய்- ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி.மீட்டர் தூரத்தை 40 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்பு இந்த தூரத்தை ரெயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிக குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே மிக நீளமான அதிவேக விரைவு ரெயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதன்மூலம் நவீன ரெயில்வே தொழில் நுட்பத்தை சீனா பெற்றுள்ளது என்று சீன ரெயில்வே அமைச்சகத்தின் தலைமை என்ஜினீயர் கிகுவாவூ தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் ஒற்றைச் சக்கரத்துடன் வெற்றிகரமாகத் தரையிறக்கினார் நிஜ ஹீரோ!
இத்தனைக்கும் அந்த விமானத்தை அவர் ஓட்டிவரவில்லை . ஆபத்துக்கு உதவிபுரியும் உடனடி பைலட்டாக அந்த விமானத்தில் பயணம் செய்த 49வயதான டேவிட் ப்ரேடாதான் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.
யுத்தத்தால் ஆப்கானின் அவலம் - தேசிய தொலைக்காட்சியில் கண்ணீர்விட்டழுத ஆப்கான் அதிபர்!
இக்காட்சிகள் குறித்த தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது, பார்வையிட்ட அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர்.
கடந்த 2001 செப்டெம்பர் 11 தாகுதலின் பிறகு, ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. எனினும் அதிகரித்த தலிபான் தாக்குதல்களில், அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட ஆண்டாக இவ்வருடம் பதிவாகியுள்ளது.
காம உணர்ச்சி அமிர்தமா? நஞ்சா?
பாலுறவு அல்லது செக்ஸ் என்பது தீண்டத்தகாத அல்லது கேட்கக் கூடாத கெட்ட வார்த்தையல்ல. எந்தமாதிரியான தருணத்தில், எந்த முறையில் நாம் அந்த உறவைக் கையாள்கிறோம் என்பதைப் பொருத்தே அது நஞ்சாகிறதா? அல்லது அமிர்தமாக ருசிக்கப்படுகிறதா? என்பது தெரியவரும். காமம் என்பது உடலின் பல்வேறு உணர்ச்சிகளில் ஒன்று என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாம்பழம், ஆப்பிள், வாழைப்பழம் என ஒவ்வொரு பழத்திற்கும் ஒருவித சுவை இருப்பதைப் போல, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் காம உணர்ச்சி என்பது, அவர்களின் தன்மையைப் பொறுத்து வேறுபடலாம். நம் உடல்நலம் பாதிக்கப்படும்போது, நோய் நிவர்த்திக்குத் தேவையான குறிப்பிட்ட ஒரு மருந்தை உட்கொள்கிறோம். அதனால் உடல் உபாதைகளில் இருந்து விடுபடுவதைப் போலவே பாலுறவையும் எடுத்துக் கொள்ளலாம். கிராமங்களில் பொதுவாக ஊர் சுற்றிக்கொண்டு, வீட்டிலிருக்கும் பெரிசுகளுக்குக் கட்டுப்படாமல் திரியும் விடலைகளைப் பார்த்து, ``சீக்கிரம் இவனுக்கு கால்கட்டு போடணும், அப்பத்தான் சரியா வருவான்' என்று கூறுவதைப் பார்த்திருக்கிறோம். அதாவது, வாலிப முறுக்கேறித் திரியும் இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைப்பதால், உரிய நேரத்தில் அவர்களின் மனோநிலையை மாற்றி, பொறுப்புள்ள மனிதனாக்கலாம். திருமணம் முடிந்தால், மனைவியைச் சுற்றி வருவான். வாழ்க்கையில் ஒரு பந்தம், பிடிப்பு ஏற்படும் என்பதை உணர்த்தவே அப்படிக் கூறுவார்கள். காமம் என்பது மன அழுத்தம், மனச்சோர்வில் இருந்து மனிதன் விடுபடுவதற்கு ஒரு முக்கியமான உணர்வாகத் திகழ்கிறது. தவிர, மனித வாழ்க்கை எனும் தாத்பர்யத்தில் தாம்பத்யம் மூலமே சந்ததி பெருக்கம், இனவிருத்தி ஏற்படுகிறது. எனவே எதற்காக வாழ்கிறோம் என்றால், அடுத்த சந்ததியினரின் நலனுக்காக, அவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுகிறோம். இவற்றுக்கெல்லாம் மூலாதாரமாக விளங்குவது பாலுறவு அல்லது காம உணர்ச்சியே. |
எதிர்காலத்தில் நோய்களை கண்டறிவதற்கு கையடக்க லேசர் கருவிகள் பயன்படுத்தலாம்
இந்த தொழில்நுட்பம் ஐந்தாண்டுகளுக்குள் பரவலாக பயன்பாட்டில் இருக்குமென்பது பிரிட்டன் விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலாகும். இந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் ராமன் ஸ்பெக்ட்றோஸ்கொப்பி என்பதாகும். இதன் மூலம் மார்பக புற்றுநோய், ஒஸ்ரியோ பொரோசிஸ் போன்ற நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை மிகவும் திருத்தமாகவும், வேகமாகவும் அறிந்து கொள்ளலாமென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தொழில்நுட்பம் மலிவானதென்பதும் குறிப்பிடத்தக்கது. |
அரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம் _
அரிசி மற்றும் தானியங்களை அரைத்து நீர் சேர்த்து பசை போன்ற கலவையாக இந்த இயந்திரம் உருவாக்குகின்றது. பின்னர் அக்கலவையைப் பாணாக தயாரிக்கின்றது.
இது சாதாரண பாண் போன்று மிகவும் சுவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு பாணை சுமார் 1 மணி நேரத்திற்குள் தயாரிக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.
2011 ஆம் ஆண்டில் ஆசிய சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் மேற்படி இயந்திரம் சுமார் 593 அமெரிக்க டொலர் வரை விலையிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
