Wednesday, September 29, 2010

உலகின் அதிஉயர குழந்தை : வயது இரண்டரை, உயரம் 4 அடி 5அங்குலம்! (பட இணைப்பு)

  உலகின் உயரமான குழந்தையாக இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மீரட் மாவட்டத்தைச் சேர்ந்த கரன் சிங் கருதப்படுகின்றார். 

இரண்டரை வயதான இக்குழந்தையின் தற்போதைய உயரம் 4 அடி 5 அங்குலங்கள். 7 அடி 2 அங்குலமான இவரது தாயார் ஆசியாவின் உயரமான பெண்மணியென்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஒரு கூடைப்பந்து வீராங்கனையாவர். 

இதே வயதையொத்த குழந்தைகளைவிட இவர் சுமார் 2 மடங்கு உயரமாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

பிறக்கும் போதே இக்குழந்தை 2 அடி உயரம் இருந்ததாகவும், தன்னை விட உயரமாக, தன் மகன் வளர்வான் எனவும் கரனின் தாயார் தெரிவித்துள்ளார்.

கரன் தினமும் 5 அப்பிள்கள் 10 தேக்கரண்டி தேன் போன்றவற்றை உண்கின்றான்.

காலையில் எழுந்தவுடனேயே உணவை பற்றிக் கேட்பதாகவும், எப்போழுதும் உண்ட வண்ணமே இருப்பதாகவும் இவரது தாயார் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment