World News



நிதி பற்றாக்குறையைக் குறைக்க ஒபாமாவின் புதிய திட்டம்

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா நிதி பற்றாக்குறையை குறைக்கும் விதமாக புதிய பட்ஜெட் ஒன்றை வெளியிட்டார்.
இந்த பட்ஜெட் அம்சங்களால் 2012 ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்காவின் பற்றாக்குறை பாதியாக குறைந்து விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தில் கட்டுப்பாடு மற்றும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ராணுவம் சாராத நிதிகளை குறைத்தல் மூலம் பற்றாக்குறை குறைக்கப்படுகிறது.
அதே போன்று அமெரிக்காவின் ஏழை மக்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டங்களில் குறைப்பு நடவடிக்கையும் ஒபாமா பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மக்களுக்கு கடுமையான தேர்வாக உள்ளது என ஒபாமா தெரிவித்துள்ளார்.
பற்றாக்குறையை குறைப்பதற்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டுள்ளன. வசதியான மக்கள் அறக்கட்டளைகளுக்கு அளிக்கும் வரிக்கு, விலக்கு பெறுவது என்பது கடுமையாகவே இருக்கும். எண்ணெய், எரிவாயு, கரி உற்பத்தியாளர்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் அமெரிக்க கருவூலத்திற்க்கு கூடுதல் நிதி அளிக்க வேண்டிய சுழலும் ஒபாமா பட்ஜெட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Share/Bookmark





கொலம்பிய கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட 20 லட்சம் டொலர் மதிப்புள்ள போதை மருந்து

மெக்ஸிக்கோவிற்கு போதை மருந்து கடத்தும் நீர்மூழ்கி கப்பலை கொலம்பியா கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.
நீர்பகுதியில் 9 மீற்றர் ஆழத்தில் பயணிக்கும் திறன் கொண்ட இந்த கப்பல் அதி சொகுசு வசதிகளை கொண்டதாகும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிடிபட்ட நீர் மூழ்கி கப்பலில் 8 டன் பொதிகளையும், 4 பயணிகளை ஏற்றிச் செல்லும் வசதியும் உள்ளது. அந்த கப்பல் மெக்ஸிகோவிற்கு பயணிக்க தயாரான நிலையில் பிடிபட்டது. நீர் மூழ்கி கப்பல்(100 அடி) கொண்டது.
இந்தக் கப்பலை தென்மேற்கு கொலம்பியாவின் திம்பிகுயி வனப்பகுதியில் மறைத்து வைத்து போது அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த கப்பல் குறித்து பசிபிக் கடற்படையின் கமாண்டர் ஹெர்னான்டோவில்ஸ் வெலஸ் கூறுகையில்,”இதுவரை கண்டறிந்த உள்நாட்டு நீர்மூழ்கி கப்பல்களில் இது மிகப் பெரிய கப்பல்" என்றார்.
பிடிபட்ட நீர் மூழ்கி கப்பல் 20 லட்சம் டொலர் மதிப்புடையது ஆகும். இந்த கப்பல் பிடிபட்டதை தொடர்ந்து கோகைன் போதை மருந்து கடத்தும் கும்பலை பிடிக்கும் நடவடிக்கையை கொலம்பியா கடற்படையினர் தீவிரப்படுத்தனர்.

Share/Bookmark


எட்டாவது உலக அதிசயம் நியூசிலாந்தில்


இந்தியாவின் தாஜ்மகால், சீனாவின் பெருஞ்சுவர் உள்ளிட்ட ஏழு உலக அதிசயங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன.
தற்போது எட்டாவது உலக அதிசயமாக நியூசிலாந்தில் உள்ள ரொடோ மாகானா ஏரிக்குள் மூழ்கி கிடக்கும் மொட்டை மாடி கட்டிடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை 60 மீற்றர் ஆழத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. இவை 19 ம் நூற்றாண்டை சேர்ந்தவை எனத் தெரிகிறது. எரிமலைகளின் சீற்றத்தால் கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்பு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கிவி மற்றும் அமெரிக்கா விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் இந்த மொட்டை மாடிகள், இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் ராட்சத திருமண “கேக்” வடிவத்தில் உள்ளது. அது கடந்த 1886 ம் ஆண்டு ஏரிக்குள் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த ஏரியானது நியூசிலாந்தின் ஜியோ தெர்மல் பகுதியில் உள்ள வடக்கு தீவில் அமைந்துள்ளது. இதை தண்ணீருக்குள் மூழ்கி பார்க்க அதி நவீன ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் தங்கள் நாட்டின் சுற்றுலா வளர்ச்சி அதிகரிக்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

Share/Bookmark



ஈரான் அரசுக்கு எதிரான போராட்டம்: ஹிலாரி கிளிண்டன் ஆதரவு

ஈரான் தலைநகர் டெகரானில் ஆயிரகணக்கான மக்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர்  ஹிலாரி கிளிண்டன் ஆதரவு தெரிவித்துள்ளார். எகிப்தில் தங்களது உரிமைக்காக மக்கள் போராடி வெற்றி கண்டுள்ளனர். அதே போன்று ஈரானிலும் போராட்டம் வெடித்துள்ளது   என  ஹிலாரி  கிளிண்டன் தெரிவித்தார்.
தலைநகர் டெகரானில் போராட்டம் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையையும் மீறி போராட்டம் நடந்த மக்கள் திரண்டார்கள். இதனால் போராட்டகாரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் பிடித்து சென்றனர். எதிர்கட்சி தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டார்கள். தலைநகரை தொடர்ந்து அரசுக்கு எதிராக ஈரானின் முக்கிய நகரங்களான இஸ்பகனன், மாஷ்ஹட், ஷிராஸ் நகரங்களிலும் மக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
கடந்த 2009-ம் ஆண்டில், ஈரான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் நடத்திய போராட்டத்தில் 8 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Share/Bookmark



























மரக்கரண்டியால் புலியை விரட்டிய வீரப் பெண்
மலேசியாவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவன் மேல் பாய்ந்த புலியை ஒரு பெரிய மரக்கரண்டியைக் கொண்டு தலையிலேயே அடித்து விரட்டியுள்ளார்.
மலேசியாவின் வட பகுதியில் அடர்ந்த காடுகள் அதிகம். இங்கு பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜகாய் பழங்குடியினர் ஒரு பகுதியில் வசித்து வருகின்றனர். பழங்குடியினர் குடியிருப்பை சேர்ந்த டாம்புன் ஜெடியூ என்பவர் நேற்று தனது குடிசைக்கு அருகிலேயே அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது திடீரென அவர் மீது புலி ஒன்று பாய்ந்து அவரை தாக்கியது. இவர் அருகில் இருந்த மரத்தில் ஏறி தப்ப முயன்றுள்ளார். அப்போதும் புலி அவரை விடாமல் கீழே தள்ளியுள்ளது. புலியின் வாயை இறுகப் பிடித்துக் கொண்டபடி டாம்புன் அபயக்குரல் எழுப்பியுள்ளார்.
இதைக் கேட்ட அவரது மனைவி பெரிய மரக்கரண்டியை எடுத்து வந்து, புலியின் தலையிலேயே ஒரு போடு போட்டுள்ளார். இதனால் புலி தலை சுற்றியபடி அருகில் இருந்த புதருக்குள் பாய்ந்து தப்பியோடி விட்டது.
இதையடுத்து தலையிலும், கால்களிலும் காயங்களுடன் நகர்ப்பகுதி மருத்துவமனை ஒன்றில் டாம்புன் அனுமதிக்கப்பட்டார். அவர் கூறியதாவது,"எனது மனைவி மட்டும் உரிய நேரத்தில் வரவில்லை என்றால் நான் இறந்திருப்பேன்" என்றார்.
இதுபற்றி கேள்விப்பட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பந்தம் நடைபெற்ற இடத்தில் இருந்து, ஆள் நடமாட்டம் இல்லாத அடர்ந்த காட்டுக்குள் புலியை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



Share/Bookmark



வளர்ச்சியில் ஐப்பான் இடத்தைக் கைப்பற்றியது சீனா

உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் கடந்த 42 ஆண்டுகளாக 2 ம் இடத்தில் இருந்த ஜப்பானை பின்னுக்குத் தள்ளி சீனா 2 ம் இடத்தைப் பிடித்தது.
கடந்த 2010 ம் ஆண்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி பற்றிய புள்ளி விவரங்களை ஜப்பான் அரசு வெளியிட்டது. ஜப்பானில் கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மதிப்பு 251 லட்சம் கோடியாக இருந்தது. இது முந்தைய ஆண்டைவிட 3.9 சதவீத வளர்ச்சியாகும்.
குறிப்பாக அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 1.1 சதவீதமாக சரிந்தது. 2008 ல் ஏற்பட்ட நிதி நெருக்கடிக்குப் பிறகு முதன் முறையாக பொருளாதார வளர்ச்சி சரிவிலிருந்து மீண்டது குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாங்கும் சக்தி குறைந்தது, கடன் சுமை அதிகரிப்பு, முதியவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் ஜப்பான் நாணயமான யென் மதிப்பு உயர்ந்தது ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு தடைக்கல்லாக அமைந்தன.
இதனால் கடந்த 42 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ம் இடத்தில் இருந்த ஐப்பான் அந்த இடத்தை இழந்துள்ளது. இந்நிலையில் சீன பொருளாதாரம் கடந்த ஆண்டில் 10 சதவீதம் வளர்ந்து 270 லட்சம் கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்துள்ளது.
இதனால் முதல் முறையாக உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் 2 ம் இடத்தைப் பிடித்தது. எனினும் ஜப்பானியர்களின் தனிநபர் சராசரி வருமானம் 19.3 லட்சமாக உள்ளது. இது சீனாவைவிட 10 மடங்கு அதிகம்.
இந்த பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. எனினும் 2025 ம் ஆண்டில் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா முதலிடத்தைப் பிடிக்க வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Share/Bookmark