Thursday, December 30, 2010

முக்கிய விடயங்களை நினைவூட்டுவதற்கு கவுண்டவுன் டைமர் மென்பொருள்


அளவில் சிறியதுமான முக்கியமான விடயங்களை நினைவூட்டக்கூடிய அப்பிளிகேஷன் free Countdown timer ஆகும். இதன் மூலம் நினைவூட்ட வேண்டிய விடயத்தையும் அதற்குரிய நேரம், நாள் போன்ற விடயங்களை குறித்து வைத்துவிட்டால் அந்த நேரம் வந்ததும் அலாம் மூலம் நினைவூட்டும் வசதியைத்தருகிறது.
உதாரணமாக பிறந்தநாள் அல்லது முக்கிய அலுவலக கூட்டங்கள் போன்றவற்றை குறித்து வைத்துவிடலாம்.
டவுண்லோட் செய்ய

கிறிஸ்மஸுக்காக 250 மணிநேர முயற்சியில் உருவாகியது கூகுள் இலட்சினை!


கிறிஸ்மஸுடனான குளிர்கால விடுமுறை கொண்டாட்டத்தை முன்னிட்டு, 17 ஓவியப்புகைப்படங்களாக தனது கூகிள் இலட்சினையை மாற்றியமைத்துள்ளது கூகுள் இணையத்தளம்.
உலகின் மிக பிரபலமான விடுமுறை சுற்றுலா தளங்களான சிட்னி பாலம், ஃபுஜி மலை, ரஷ்யாவின் புனித பாஸில்ஸ் கதேட்ரால், இத்தாலியின் வெனிஸ் கொந்தலாஸ், சஹாரா பாலைவனம், நேபாளம், சீனப்பெருஞ்சுவர் ஆகியவற்றை சில தூரிகை ஓவியப்படங்கள் குறிக்கின்றன.

உலகின் மிகத்தொன்மையான கலாச்சார பிண்ணணிகளை இன்னும் சில தூரிகை ஓவிய படங்கள் குறிக்கின்றன. இந்தியாவின் பாரம்பரிய பரதநாட்டியம், ஆ யூல் லாக் போன்ற கிறிஸ்மஸுக்கான சிறப்பு உணவு வகைகள், கிழக்கத்தேய ஊட் கிட்டார், மொரோக்கே ஹெனா ஒளிவிளக்குகள், உலகப்புகழ் பெற்ற சிலி வைன் உற்பத்தி என்பவற்றை பற்றிய தகவல்கள் இப்படங்களில் காணப்படுகின்றன.

கிறிஸ்மஸ் தாத்தா, இரவில் இரகசியமாக ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று வெகுமதிகளை வைத்துவிட்டு திரும்பும் தொணியில் புகழ் பெற்ற Up on the Housetop பாடலுடன் தனியான ஒரு படம் தீட்டப்பட்டுள்ளது.

இப்புகைப்படங்களுக்கு  மேலே நீங்கள் மவுஸை கொண்டு செல்லும் போது அவை பெரிதாக மாறுவதுடன் கிளிக் செய்யும் போது அவை பற்றிய மேலதிக விவரணங்களை பெற்றுக்கொள்ள உதவும் தளங்களுக்கு லின்க் செல்கிறது.

2010 இல் இதுவரை வெளிவந்த கூகிள் சின்னங்களில், மிக நேர்த்தியாகவும், அழகாகவும் உருவாக்கபப்ட்ட கூகிள் டூடிலாக, இந்த 17 வண்ணப்புகைப்படங்கள் கொண்ட இலட்சினை சாதனை படைத்துள்ளது.

இதனை உருவாக்க மரியோ லூபஸ் தலைமையிலான கூகுள் நிறுவன குழுவினருக்கு 250 மணித்தியாலங்கள் பிடித்திருக்கிறது.
2010 இன் இறுதியை பிரமாண்டமாக கொண்டாட வேண்டுமென்பதற்காகவே இவ்வளவு கஷ்ட்டப்பட்டார்களாம்!

இதனால் கிறீஸ்மஸ் முடியும் வரை இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த சின்னம் தொடரவிருக்கிறது.
2010 இல் கூகுள் மொத்தம் 270 டூடில்கள் (இலட்சிணைகளை) உருவாக்கியிருந்தது. பலவும் மிக அழகாக வடிவமைக்கபட்டீருந்தன.

உலகின் வயது குறைந்த யோகா ஆசிரியை (பட இணைப்பு)

  இந்திய ஆசிரமத்தில் சுருதி பாண்டே என்ற 6 வயதான சிறுமி உலகிலேயே வயது குறைந்த யோகா ஆசிரியையாகக் கருதப்படுகின்றார்.

இவர் தற்போது வட இந்தியாவிலுள்ள ஆசிரமமொன்றில் யோகா ஆசிரியையாக உள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த இவரது குரு ஹரி சேட்டன் (வயது 67), சுருதி 4 வயதாக இருக்கும் போதே தன்னிடம் யோகா கற்பதற்காக சேர்ந்ததாகவும் அவளிடம் இருந்த சிறப்புத்திறமையை இனங்கண்டு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தற்போது இச்சிறுமி காலை 5.30 மணிக்கே வகுப்பை ஆரம்பித்து விடுவார். 

இது குறித்து கருத்து தெரிவித்த அச்சிறுமி, 

தனது வழிகாட்டல்களை ஏனையோர் பின்பற்றுவது தன்னை ஆசிரியை போல் உணரச் செய்வதாகவும் தனது சகோதரன் யோகா கலையில் ஈடுபட்டதனாலேயே தனக்கும் ஆர்வம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கின்றார். 

தற்போது 11 வயதான இவரது சகோதரர் ஹார்ஸ் குமார், 5 வயதிலேயே 84 யோக நிலைகளைக் கற்றமையால் லிம்கா சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






வறண்ட சருமத்திற்கான பேஸ் மாஸ்க்

 முட்டையின் வெள்ளைக் கரு, ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் சோளமாவு, இரண்டு டீஸ்பூன் பாதாம் எண்ணெய் மற்றும் ஐந்து துளி ஜெரேனியம் எசன்ஷியல் ஆயில் ஆகியவற்றை கலந்து மிக்சியில் அடித்துக் கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வர முகம் பொலிவு பெறும் .

முகத்தை பளபளபாக்கும் பழ வகைகள்

 சருமம் பளபளக்க வேண்டுமா?,

பழுத்த வாழைப்பழத்துடன் பால் கலந்து முகத்தில் பூசுங்கள்.முகம் பளபளக்கும் பப்பாளி பழம், எலுமிச்சை சாறு கலந்து தடவவும் முகத்துக்கு நல்ல நிறம் கிடைக்கும்.

ஆரஞ்சு சாறை குளிர்சாதன பெட்டியில் வைத்து கட்டியாக்கி ஒரு வெள்ளை துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஒத்தி எடுக்கவும் கண்கள் பளீச்சாகும்வெள்ளரிக்காய் சாற்றில் முல்தானிமெட்டி, பால் சேர்த்து முகத்தில் பூசி பிரகு கழுவி விடவும். வெய்யிலில் கருத்த முகம் பொலிவு பெறும் தர்பூசினி பழச்சாறு, பயற்றமாவு கலந்து முகத்தில் பூசினால் முகம் புதுப்பொலிவு கிடைக்கும். தக்காளிப்பழத்தை முகத்தில், கைகளில் தடவி வரவும்

இப்படி தினமும் ஒரு 10 நிமிடம் நம் அழகுக்காக செலவு செய்தால் வயதானாலும் இளமையாக இருக்கலாம் 

அதிகம் கூந்தல் உதிர்வதை தடுக்க

 வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும்.

கடுக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும்.

வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். நெல்லிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இளநரை கருமை நிறத்திற்கு மாறும்.

அதிமதுரம் 20 கிராம், 5 மில்லி தண்ணீரில் காய்ச்சி ஆறிய பின் பாலில் ஊறவத்து 15 நிமிடம் கழித்து கூந்தலில் தடவி ஒரு மணி நேரம் ஊற வைத்து குளிக்க வேண்டும். ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து முடி உதிர்வதை தடுக்கலாம்.
 .