Wednesday, September 29, 2010

எதிர்காலத்தில் நோய்களை கண்டறிவதற்கு கையடக்க லேசர் கருவிகள் பயன்படுத்தலாம்

எதிர்காலத்தில் நோய்களை கண்டறிவதற்கு எக்ஸ் கதிர்களுக்கு பதிலாக லேசர் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தும் கையகடக்க கருவிகள் புழக்கத்தில் வரக்கூடுமென விஞ்ஞானிகள் எதிர்வு கூறுகிறார்கள்.
இந்த தொழில்நுட்பம் ஐந்தாண்டுகளுக்குள் பரவலாக பயன்பாட்டில் இருக்குமென்பது பிரிட்டன் விஞ்ஞானிகளின் எதிர்வு கூறலாகும்.
இந்தத் தொழில்நுட்பத்தின் பெயர் ராமன் ஸ்பெக்ட்றோஸ்கொப்பி என்பதாகும். இதன் மூலம் மார்பக புற்றுநோய், ஒஸ்ரியோ பொரோசிஸ் போன்ற நோய்களின் ஆரம்ப அறிகுறிகளை மிகவும் திருத்தமாகவும், வேகமாகவும் அறிந்து கொள்ளலாமென்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தொழில்நுட்பம் மலிவானதென்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment