Wednesday, September 29, 2010

அரிசி பாண் தயாரிக்கும் நவீன இயந்திரம் _

அரிசியின் மூலம் பாண் தயாரிக்கும் நவீன இயந்திரமொன்றினை ஜப்பானின் சான்யோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. ' கோபன் ' என இவ்வியந்திரம் பெயரிடப்பட்டுள்ளது.

அரிசி மற்றும் தானியங்களை அரைத்து நீர் சேர்த்து பசை போன்ற கலவையாக இந்த இயந்திரம் உருவாக்குகின்றது. பின்னர் அக்கலவையைப் பாணாக தயாரிக்கின்றது.

இது சாதாரண பாண் போன்று மிகவும் சுவையாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பாணை சுமார் 1 மணி நேரத்திற்குள் தயாரிக்கமுடியுமென தெரிவிக்கப்படுகின்றது.

2011 ஆம் ஆண்டில் ஆசிய சந்தைக்கு வருமென எதிர்பார்க்கப்படும் மேற்படி இயந்திரம் சுமார் 593 அமெரிக்க டொலர் வரை விலையிடப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment