பிரேஸிலைச் சேர்ந்த எடில்சன் என்ற 29 வயதான இவ்விளைஞர் சத்திரசிகிச்சைக்குப் பின்னர் தான் நலமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் கத்தியால் குத்தப்பட்டுள்ளார். அப்போது வைத்தியர்கள் மூளை பாதிக்கப்படலாம் எனக் கருதியதால் கத்தியின் கைபிடியை மட்டுமே அகற்றியுள்ளனர்.
கூர்மையான முன் பாகத்தை அகற்ற முன்வரவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் 3 வருடங்களாக கடும் தலைவலியால் அவதிப்பட்டு வந்ததாகவும் அதனையடுத்தே சத்திரச்சிகிச்சைக்குத் தாம் இணங்கியதாகவும் அது வெற்றி அளித்துள்ளதாகவும் எடில்சன் தெரிவிக்கின்றார். _
No comments:
Post a Comment