Wednesday, September 29, 2010

யுத்தத்தால் ஆப்கானின் அவலம் - தேசிய தொலைக்காட்சியில் கண்ணீர்விட்டழுத ஆப்கான் அதிபர்!


ஆப்கான் அதிபர் ஹமிட் கராசி, ஆப்கான் யுத்த நிலைமைகள் தொடர்பில் நேற்று, அந்நாட்டு தேசிய தொலைக்காட்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது, ஆப்கானில்  முடிவில்லாது தொடரும் யுத்த நிலைமைகள் தன்னை மிகவும் பாதித்துவிட்டதாக கூறினர்.
இப்படியே சென்றால்  எமது அடுத்த தலைமுறைக்கு ஆப்கானிஸ்த்தான் என்றொரு நாடே இல்லாமல் போய்விடும். ஆப்கானின் அமைதிக்கான குழுவினர், தலிபான்களின் அச்சுறுத்தலில் இருந்து விடுபட இராணுவ ரீதியான தீர்வை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் சிறந்த அரசியல் தீர்வுகளை வழங்குவதிலேயே மும்முராகியுள்ளனர். எனினும் இது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை.
இவ் யுத்தம் முடிவுக்கு வராவிடின், எனது மகன் மிர்வைஸிற்கு கூட அவனது தாய்நாட்டில் வாழ வழியில்லாமல் போய்விடுமோ என  எனக்கு பயமாக இருக்கிறது. எனக்கூறிய ஹமீட், ஒரு கட்டத்தில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார்.

இக்காட்சிகள் குறித்த தேசிய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய போது, பார்வையிட்ட அவரது ஆதரவாளர்கள் மிகுந்த கவலை அடைந்தனர்.

கடந்த 2001 செப்டெம்பர் 11 தாகுதலின் பிறகு, ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. எனினும் அதிகரித்த தலிபான் தாக்குதல்களில்,  அதிகமான உயிரிழப்புக்கள் ஏற்பட்ட ஆண்டாக இவ்வருடம் பதிவாகியுள்ளது.

No comments:

Post a Comment