நீண்hடகாலமாக நெடுந்தீவிற்கான பயணிகள் சேவைக்கென தரமான படகொன்று இல்லாத நிலையில் தமிழர்கள் வாழ்வில் வரலாற்றில் மறந்து விட முடியாத குமுதினிப் படகு அந்த இடத்தை நிரப்பிக் கொண்டிருந்தது.
இந்நிலையில் குமுதினிப்பட்கு முளுமையாக பழுதடைந்து பொது மக்கள் பல சிரமங்களை மக்கள் எதிர்கொண்டிருந்தனர். இது குறித்து வீதி அபிவிருத்தி அதிகார சபை மேற்கொண்ட முயற்சியின் காரணமாக சுமார் 8 கோடி ரூபா செலவில் இந்த படகு கட்டப்பட்டுள்ளது.
இந்தப் படகை தென்னிலங்கைளில் உள்ள நறுவனமொன்று கட்டியுள்ளது. இன்றைய தினம் காலை படகு சம்பிரதாய பூர்வமாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இதில் அரச அதிபர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் வடதாரகை2 என்ற பெயர்கொண்ட இந்தப்படகை மகிந்த தேரு என மாற்றுவோம் என பகிரங்கமாக மக்களிடம் விருப்பம் கேட்டு தனது வால் பிடித்தனத்தின் உச்சத்தை காட்டியுள்ளார்.
No comments:
Post a Comment