ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் சுகதேகியாக இருப்பதாகவும் தனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
ஜனாதிபதி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தனது இளைய சகோதரருடன் சில நாட்கள் தங்கியிருந்து ஓய்வெடுப்பதற்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்தார்.
இதன்போது சில விஷமிகள் ஜனாதிபதி நோய்வாய்ப்பட்டு இருக்கிறார் என்று ஒரு போலியான தகவலை வெளியிட்டனர். அதனையடுத்து ஜனாதிபதி நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்ற வதந்தி நாடெங்கிலும் காட்டுத்தீ போல் பரவ ஆரம்பித்தது.
நாடு திரும்பிய ஜனாதிபதியிடம் இதுபற்றி அனைவரும் முறைப்பாடு செய்ததை அடுத்த நான் சுகதேகியாக இருக்கிறேன். எனக்கு எந்தவித நோய்ப் பாதிப்பும் இல்லை என்று பகிரங்கமாக அறிவித்தார்.
அதிகாலையில் ஜனாதிபதி உண்மையிலேயே சுகதேகியாக இருக்கிறாரா என்பதை நேரில் கண்டறிவதற்காக இருதினங்களுக்கு முன்னர் திடீரென்று சிங்களப் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் அலரிமாளிகைக்குச் சென்ற போது ஜனாதிபதி தீவிரமாக உடற்பயிற்சியில் ஈடுபடுவதைப் கண்டுள்ளார்.
No comments:
Post a Comment