| இங்கிலாந்தில் உள்ள எஸ்செஸ் என்ற இடத்தை சேர்ந்தவர் ஜிம்ஓவன் (66). தற்போது இவர் பாசில் டன் கவுன்சிலில் பணிபுரிகிறார். இங்கு அவர் கடந்த 1968-ம் ஆண்டில் இருந்து பணியாற்றி வருகிறார். அன்று முதல் இன்று வரை அதாவது 43 வருடங்கள் ஒருநாள் கூட விடுமுறை எடுக்காமல் பணியாற்றி வருகிறார். இந்த தகவலை அந்நாட்டு பத்திரிகை வெளியிட்டுள்ளது. தனது பணி குறித்து ஜிம் ஓவன் கூறும்போது, தினமும் அதிகாலையில் எழுகிறேன். தினமும் மகிழ்ச்சியுடன் எனது பணியை தொடங்குகிறேன். இது எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. மேலும் நான் சத்தான உணவுகளை சாப்பிடுகிறேன். புகைப்பிடிக்கும் பழக்கம் கிடையாது. வேலை செய்யும் போது சுத்தமான காற்றை சுவாசிக்கிறேன். எனவே நான் ஆரோக்கியமாக வாழ்கிறேன். தற்போது எனக்கு ஓய்வு பெறும் வயதுதான். இருந்தாலும் பணியில் இருந்து ஓய்வு பெற நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். ஜிம்ஓவனுக்கு 2 மகன்களும் 3 பேரக்குழந்தைகளும் உள்ளனர். |
Saturday, January 29, 2011
43 ஆண்டுகளாக விடுமுறை எடுக்காமல் பணிபுரிந்த முதியவர்
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment