கனேடிய எல்லை சேவைகள் சபையின் அறிக்கையை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் இணையத்தளம் இந்த செய்திய வெளியிட்டுள்ளது.
சன் சீ கப்பல் கனடாவை சென்று ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தொடர்சியாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் கப்பலில் வந்த அகதிகள் கனடாவில் சமாதானமானமுறையில் வாழ்வதனையே விரும்புவதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு சபை தெரிவித்துள்ளது.
எனினும் விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் என இதுவரையில் 32 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த அகதிகள் இலங்கையில் இருந்து தாய்லாந்தின் ஊடாக கனடா அனுப்புவதற்காக 45 ஆட்கடத்தல் குழுக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment