Tuesday, January 25, 2011

வெயில் படாத உடம்பு தான் குண்டாகும்: ஆய்வில் நிரூபம்


வெயில் படாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் நவீன வாழ்க்கை முறைதான் உடல் பருமனாவதற்கு முக்கிய காரணம் என்று நாட்டிங்காம் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ளது.
நமது உடம்பில் இரண்டு வகையான கொழுப்புகள் உண்டு.அவை பழுப்பு கொழுப்பு மற்றும் வெள்ளைக்கொழுப்பு.
உடல் பருமாவனதற்கு காரணம் வெள்ளைக்கொழுப்பு. பழுப்புக் கொழுப்பானது குளிர்காலத்தில் உடம்பை சூடாக வைத்துக்கொள்வதற்கு உதவுகிறது. இந்த கொழுப்பின் எடையானது, சக்கரையைவிட 300 மடங்கு அதிக உடல் சூட்டைக் கொடுக்கக்கூடியது.
பிறந்த குழந்தையின் உடலிலும், குளிர்காலத்தில் நிலத்தடியில் வளைக்குள் ஹைபர்னேஷன் செய்யும் முயல் போன்ற உயிரினங்களிலும் பழுப்புக்கொழுப்பு காணப்படுகிறது.உடல் வெயிலில் படும்போது பழுப்புக்கொழுப்பு உருவாகிறது.
வெயில் இல்லாத குளிர்காலத்தில்,வெப்பம் கொடுத்து உடம்பைக் காக்கிறது. மனிதர்கள் வெயில்படாமல் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான் சாப்பிடும் சாப்பாடு வெள்ளைக் கொழுப்பாக மாறி உடம்பை குண்டாக்கிறது.
இதனால் கொஞ்சமாவது தினமும் வெயில் காயுங்களேன்,உடம்பு குண்டாவதை தடுக்கலாம்.

No comments:

Post a Comment