Saturday, January 29, 2011

இணையத்தில் தனிப்பட்ட தரவுகளை பாதுகாப்பது குறித்து இளைஞர், யுவதிகளுக்கு விளக்கம்


இணையத்தில் தனிப்பட்ட தரவுகளை எவ்வாறு பாதுகாப்பது என்பது தொடர்பில் இளைஞர் யுவதிகளுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.
சுவிட்சர்லாந்து தகவல் பாதுகாப்பு ஆணையாளரினால் இந்த விசேட விழிப்புணர்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சிறுவர் சிறுமியரும், இளைஞர் யுவதிகளும் இணைய தளங்களில் குறிப்பாக சமூக வலையமைப்புகளில் தங்களது தரவுகளை இணைக்கும் போது கூடுதல் நிதானம் தேவை என தகவல் பாதுகாப்பு ஆணையாளர் ஹான்ஸ்பெட்டர் தூர் தெரிவித்துள்ளார்.
தகவல்ளை இணைப்பதன் மூலம் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்து புரிந்து கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இணையத்தைப் பயன்படுத்துவதனால் தீமை கிடையாது எனவும், எவ்வாறான தரவுகளை பரிமாறிக் கொள்வது என்பதிலேயே சிக்கல் நிலைமை காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment