Monday, January 10, 2011

ஓவியரின் கொடூர சிந்தனை குழந்தையின் மண்டை ஓட்டில் 8 ஆயிரம் வைரங்கள் பதிப்பு

இங்கிலாந்து தலைநகர் லண்டனை சேர்ந்தவர் டேமி யன் ஹிர்ஸ்ட். இவர் புகழ் பெற்ற ஓவியர். தனது வித்தியாசமான சிந்தனை களின் மூலம் பலவிதமான ஓவியங்களை வரைந்து சாதனை படைத்துள்ளார். 

இவர் இறந்தவர்களின் மண்டை ஓடுகளில் வைரங்களை பதித்து ஓவியங்கள் வரைந்தார். இது அனை வரின் கவனத்தையும் கவர்ந்தது. இந்த நிலையில், சமீபத்தில் அவர் பிறந்து இறந்த பச்சிளம் குழந்தையின் மண்டை ஓட்டில் வைரம் மற்றும் வைடூரிய கற்களை பதித்து ஓவியம் வரைந்துள்ளார். 

அதில் சுமார் 8 ஆயிரம் வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. அவை இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தால் ஆனவை. வைரம் தவிர பிளாட்டினத்தாலும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர் வைரம் பதித்துள்ள மண்டை ஓடு பிறந்து 2 வாரத்தில் இறந்த குழந்தைக்குரியது என கூறப்படுகிறது. இந்த ஓவியத்தை கண்காட்சியில் வைக்க அவர் திட்டமிட்டுள்ளார். அவரது 

இந்த ஓவிய சிந்தனை கொடூரமானது என சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment