Friday, January 28, 2011

மரபணு மாற்றம் செய்யப்பட்ட 6000 நுளம்புகள்


மலேசிய அரசு டெங்கு நோயை இல்லாமல் செய்வதற்காக மரபணு மாற்றம் செய்யப்பட்ட நுளம்புகள் 60,00 ஐ காடுகளுக்குள் விட்டு உள்ளது.

இது ஒரு பரீட்சார்த்தமான முயற்சிதான்.

Aedes aegypti என்கிற இனத்தைச் சேர்ந்த நுளம்புகளில் பெண் நுளம்புகள்தான் டெங்கை ஏற்படுத்துகின்றன.

எனவே மரபணு மாற்றம் செய்து அதே இனத்தைச் சேர்ந்த ஆண் நுளம்புகளை உருவாக்கி உள்ளது இந்நாடு.

மரபணு மாற்றம் செய்யப்பட்ட இந்த ஆண் நுளம்புகளுடன், பெண் நுளம்புகள் கலவியில் ஈடுபடும்.

ஆனால் இனப் பெருக்கம் இடம்பெறாது. அல்லது குறுகிய நாட்களில் அழிந்து விடக் கூடிய வாரிசுகளே உருவாகும்.

No comments:

Post a Comment