Monday, November 1, 2010

போலீசையும் மக்களையும் சிம்பன்சி குரங்கு படுத்தும்பாடு- சுவாரஸ்யம்! (வீடியோ இணைப்பு)


அமெரிக்கா கன்சாஸ் நகரத்திலுள்ள வீடொன்றில் இருந்த குரங்கு அவ்வீட்டின் சொந்தக் காரருக்குத் தெரியாமல் கதவுகளைக் கடந்து வெளியே வந்து தன்பாட்டுக்கு அட்டகாசம் படுத்தியுள்ளது. 300 இறாததல் எடையுடைய இவ்வாலில்லாக் குரங்கு தன்பாட்டுக்கு கதவுகளைத் திறக்கக் கூடியதாக இருந்தால் மக்களின் பாதுகாப்புக் குறித்து போலீசாருக்கும் திண்டாட்டம் ஆகிவிட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தின் இடையேயும், மைக்கேல் என்னும் நபர் தனது காதலியுடன் தனது வீட்டுக் கூரையில் தவழ்ந்தபடி அக்குரங்கினை வீடியோ படம் பிடித்துள்ளார்.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தின் யன்னல்களை இக்குரங்கு தனது முழங்கையால் அடித்து உடைக்க முன்னர் அவ்வாகனத்தின் கூரையில் பாய்ந்து விளையாட்டுக் காட்டியுள்ளது. அந்த நேரத்தில் அவ்வாகனத்தினுள் ஒரு போலீஸ்காரராவது இருந்திருக்க வேண்டும்.

இக்குரங்கை நோக்கிப் போலீசார் சுட்ட போதிலும் குரங்கை அடக்க முடியவில்லை. ஆனால் மக்களுக்கு இக்குரங்கால் ஆபத்து நேரும் பட்சத்தில் அதனைச் சுட்டு வீழ்த்துவதற்கு போலீஸ் தங்கள் கைத்துப்பாக்கிகளுடன் தயாராக இருந்தனர். இறுதியில் குரங்கை வளர்த்துவந்த குறித்த வீட்டுக்காரர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து கூண்டுக்குள் அடைத்துவிட்டார்.

No comments:

Post a Comment