Sunday, November 21, 2010

20 வயது இளைஞர் தாத்தா போல் முகமூடியணிந்து கனடாவில் நுழைய முயன்றதால் கைது (படங்கள் இணைப்பு)

ஆசியாவை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவர் வயதான வெள்ளைக்காரர் போல் மாஸ்க் அணிந்து ஹாங்காங்கில் இருந்து கனடா வந்து சேர்ந்துள்ளார். கனடாவின் வான்கௌவெர் விமான நிலையத்தில் இவரின் போலித்தனம் அம்பலமானதால் கைது செய்யபபட்டுள்ளார். 

தன்னுடைய பயணத்தின் இடைவெளியிலேயே திடிரென டாய்லெட்டுக்குள் சென்ற இவர் சில நிமிடங்களில் பெரிதாக எந்த மாற்றமுமின்றி 20 வயது இளைஞராக மாறி வந்துள்ளார். இந்த விடயம் கண்காணிக்கப்பட்டதால் விமானம் தரையிறக்கப்பட்டவுடன் இளைஞரை அதிகாரிகள் கைது செய்தனர்.

20 வயதுள்ளவர் எப்படி தாத்தாவாக மாறினார் என அதிகாரிகள் சோதனையிட்ட போது அவரின் பைக்குள் வயதானவர் போன்ற முழுமையான முகமூடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனுடன் சேர்ந்து வயதானவர்கள் அணியக் கூடிய தொப்பி, கண்ணாடி ஆகியவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். தற்போது அவர் கனடாவில் அகதி உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





No comments:

Post a Comment