Sunday, October 3, 2010

சூரிச், பொரிபேர்க் கான்டன்களில் முஸ்லிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு அனுமதி

சூரிச் மற்றும் பொரிபேர்க் ஆகிய கான்டன் பாடசாலைகளில் முஸலிம் மாணவிகள் முக்காடு அணிவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளில் மாணவிகள் முக்காடு அணிவதற்கு சுவிட்சர்லாந்தில் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முக்காடு அணிவது தொடர்பில் மத்திய அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமது மத நம்பிக்கைகளை கடை பிடிப்பதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டுமென முஸ்லிம்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செயின்ட் காலனின் 15 வயதான இனிசா என்ற மாணவி முக்காடு அணிந்து பாடசாலை சென்றதாகவும், அதற்கு பாடசாலை நிர்வாகம் எதிர்ப்பை வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முக்காடு அணிவதற்கு தடை ஏற்படுத்தப்பட்டமை குறித்து இனிசா நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
கடுமையான தண்டனைகளையோ அல்லது தடைகளை விதிப்பதனை விடவும் பெற்றோருடன் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தடைகளை விதிப்பது கடும்போக்குடைய மத செயற்பாட்டார்களை உருவாக்க வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment