Sunday, October 3, 2010

சந்திரனுக்கு ஆளில்லா 2-வது விண்வெளி ஓடம் சீனா அனுப்பியது

சந்திரனில் சீனா ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கடந்த 2007-ம் ஆண்டு அக்டோபர் 24-ந்தேதி முதன் முறையாக ஆளில்லா விண்வெளி ஓடத்தை அனுப்பியது. அது கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் சந்திரனின் மேற்பரப்பில் மோதி ஆய்வு நடத்தியது.
2.48 டன் எடையுள்ள அந்த விண்வெளி ஓடத்தை சக்திவாய்ந்த லாங்மார்ச் 3-சி ராக்கெட் மூலம் அனுப்பியது. அது 6 மாதங்கள் ஆய்வு நடத்திய பின் பூமிக்கு திரும்பியது.
இந்நிலையில் 2-வது முறையாக மீண்டும் சோதனை நடத்த ஆளில்லா விண்வெளி ஓடத்தை நேற்று முன்தினம் சந்திரனுக்கு அனுப்பியது. இதற்காக ரூ.600 கோடியை ஒதுக்கியுள்ளது.
இதற்காக ஷிஜாங் விண்வெளி மையத்தில் இருந்து லாங்மார்ச் 3-சி ராக்கெட் மூலம் ஜாங் இ-2 என்ற ஆளில்லா விண்வெளி ஒடம் அனுப்பப்பட்டது. இந்த காட்சி சீனாவின் தேசிய டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

No comments:

Post a Comment