Wednesday, October 6, 2010

பொய்கூறி தப்பிய பெண்


சுவாரஸ்யமான பொய் ஒன்றை சமயோசிதமாக கூறி, ஆயுதங்களுடன் வந்த திருடன் ஒருவனிடம் இருந்து, தமது மடிகணனியை அமெரிக்க பெண் ஒருவர் பாதுகாத்துக் கொண்டுள்ளார்.

ஆயுதங்களுடன் வீட்டினுள் நுழைந்த திருடன், வீட்டில் இருந்த அனைத்து உடமைகளையும் கொள்ளை அடித்து செல்ல முற்பட்டுள்ளான். 
பின்னர் குறித்த பெண்ணின் மடிகணனியையும் பறிக்க முற்பட்ட போது, அவர் பின்தொடரும் கருவி என பொய்யாக கூறியுள்ளார்.
அதாவது இந்த கணனி எடுத்துச் செல்லப்படும் இடங்களை, செய்மதி ஊடாக அவதானிக்க முடியும் என கூறியதைத் தொடர்ந்து, திருடன் அச்சத்தில் கணனியை அங்கேயே விட்டு தப்பியோடியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து உடனடியாக சம்பவம் தொடர்பில் தமது காதலருக்கும், காவற்துறைக்கும் அறிவித்ததைத் தொடர்ந்து, திருடன் உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment