Thursday, October 7, 2010

சுற்றுலா பயணிகளால் சிதையும் சீனப் பெருஞ்சுவர்

உலக அதிசயங்களில் ஒன்றாக சீனப்பெருஞ்சுவர் உள்ளது. இதை பார்ப்பதற்காக உலகம் முழுவதிலும் இருந்து ஆண்டுதோறும் சுமார் ஒரு கோடி சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
அவர்கள் தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் போண்றவைகளை எடுத்துவருகின்றனர். சீனப்பெருஞ்சுவரில் இருந்து இயற்கை காட்சிசிகளை ரசித்துவிட்டு தாங்கள் கொண்டு வரும் பொருட்களை அங்கேயே விட்டு செல்கின்றனர். இதனால், சீனப் பெருஞ் சுவரில் காலி மதுபாட்டில்கள், உணவுப்பொருட்கள், பேப்பர்கள், பிளாஸ்டிக் பைகள் ஆங்காங்கே குப்பைகளாக கிடக்கின்றன.
சிலர் அங்கு கூடாரம் கட்டி தங்குகின்றனர். அதற்காக சீன பெருஞ்சுவரில் ஆங்காங்கே பெரிய ஆணிகளையும், இரும்பு கம்பிகளையும் அடித்து வைத்துள்ளனர். இதனால் சீனப்பெருஞ்சுவர் சிதைந்து வருகிறது. சுற்றுலாவை பெருக்குவதில் அதிக அக்கறை காட்டும் அரசு உலக அதிசயங்களில் ஒன்றான சீனப்பெருஞ்சுவரை பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். யுனெஸ்கோ நிறுவனம் வழங்கியுள்ள உலக பாரம்பரிய சின்னம் என்ற பெருமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்

No comments:

Post a Comment