ஆனால், குரங்கு ஒன்றின் செயலால் ஒரு பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் மலேஷிய செரம்பிரன் மாவட்டத்தில் நேற்று நடந்துள்ளது.
வீட்டிலிருந்த குழந்தையை இந்தக் குரங்கு கூரைவரை தூக்கிச் சென்றதால், அங்கிருந்து கீழே விழுந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
பிறந்து நான்கு நாட்களே ஆன இக்குழந்தை வீட்டின் முன் ஹோலில் உறங்கிக்கொண்டிருந்தது. அச்சமயத்தில் குழந்தை அருகில் எவரும் இருக்கவில்லை. அப்போது அங்கு வந்த குரங்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுள்ளது.
குளியலறைக்குச் சென்றிருந்த குழந்தையின் தாயாரான ( 26 வயது) ரேவதி, சிறிது நேரத்தில் அவ்விடத்திற்கு வந்துள்ளார். குழந்தையை அவ்விடத்தில் காணாததால் பதறிப் போன அவர், ஓடிச் சென்று குழந்தையின் பாட்டனாரை அழைத்துக் கொண்டு குழந்தையைத் தேடினார்.
வீடு முழுவதும் தேடிப் பார்த்துவிட்டு வெளியே வந்த அவர்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது.
ஆம், வீட்டுக்கு வெளியே, முற்றத்தில் குழந்தை இரத்தவெள்ளத்தில் கிடந்தது. கதறினார் ரேவதி. தூக்கிப் பார்த்த போது குழந்தை இறந்திருந்தமை தெரிய வந்தது.
குழந்தையின் முகத்தில் காயங்கள், கீறல்கள் காணப்பட்டிருந்தன. இச்சம்பவம் குறித்துக் குழந்தையின் பாட்டனாரான வேலாயுதம் மலேஷிய பத்திரிகை ஒன்றுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த மலேஷிய வனத்துறை உயர் அதிகாரி ஒருவர், இச்சம்பவத்திற்குக் காரணமான குரங்கு சுட்டு கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் இக்குரங்கு உணவுதேடியே அங்கு வந்திருக்கலாமெனவும் உணவென நினைத்து குழந்தையைத் தூக்கிச் சென்றிருக்கலாம் எனவும் அவ்வதிகாரி தெரிவித்துள்ளார்.
பொதுவாக குரங்குகள் எந்த உயிரையும் கொன்று உண்பவையல்ல. அவற்றுக்கு உண்ணத் தேவை காய்களும் கனிகளுமே. ஆனால், ஒருசில குரங்கு இனங்கள், அசுர பசி ஏற்பட்டு, உண்ண உணவின்றி இருக்கும் வேளை, இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுவதுண்டு எனவும் கருத்துக் கூறப்படுகிறது.
எது எப்படியோ, பத்து மாதம் சுமந்து பெற்ற குழந்தையை நான்கே நாட்களில் அநியாயமாகப் பறிகொடுத்துவிட்டுத் தவிக்கும் அந்த இளம் தாயின் மன வேதனைக்கு மருந்தேது?
No comments:
Post a Comment