Wednesday, October 6, 2010

உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் கலைப் படைப்புக்களுடன் - லண்டனில் ஒரு அரிய கண்காட்சி



உலகப்புகழ் பெற்ற கலைஞர்களின் கண்காட்சி ஒன்று லண்டனில் நடைபெற்று வருகிறது. சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்ட மரவேலைப்படு சிற்பம், கூண்டுக்கிளி சிற்பம் முதல் டாவின்ஸி, ராபெல், கோயா, ரூபென்ஸ், டாவின்ஸி போன்ற புகழ்பெற்ற ஓவியர்களின் ஓவியங்கள் வரை இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு வைக்கப்பட்டுள்ள எல்லாமே அரிய வகை கலைச்சிற்பங்கள் என்ற ரீதியில் இவ் ஓவியக்கண்கட்சி பிரபலமடைந்து வருகிறது. பண்டைய காலத்தின் 200 புகழ் பெற்ற ஓவியர்களின் சிறப்பு வாய்ந்த ஓவியங்கள் இக்கண்காட்சிக்கு அழகு சேர்க்கின்றன.
இவை வருகிற டிசம்பர் 12 ம் திகதி வரை மக்கள் பார்வைக்கு திறந்திருக்கும். லண்டனின் ரோயல் அக்கெடெமி ஆப் ஆர்ட்ஸ் நிலையத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இக்கண்காட்சியிலிருந்து சில புகைப்படங்கள்
லண்டனின் 'த கார்டியன் இணையத்தளம்' அண்மையில்இந்தியாவின் பெங்களூர் நகரின் தெருவோர கட்டிச்சுவர்களில் வரையப்பட்டிருக்கும் முரல்ஸ் (Murals) வகை ஓவியங்களின் சில புகைப்படங்களை பிரசுரித்திருந்தது. இதோ அப்பதிவிலிருந்து சில புகைப்படங்கள்
இந்த இரண்டு புகைப்படத்தொகுப்பிலும், ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் வித்தியாசமானவை தான். ஆனால் ஓவிய படைப்பில் ஒரு மெல்லிய ஒற்றுமை மேலிடுகிறது என்பதை மறுக்க முடியாது.

No comments:

Post a Comment