Tuesday, October 5, 2010

3400 வருடங்கள் பழைமையான எகிப்திய பேரரசரின் சிலை மீட்பு

சுமார் 3400 வருடங்கள் பழைமை வாய்ந்த எகிப்திய பேரரசர் ஒருவரின் சிலையின் மேற்பகுதியை தொல்பொருளியல் ஆய்வாளர்கள் மீட்டுள்ளனர்.
இதனை எகிப்திய கலாசார அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் அமெனோடெப் மன்னரின் 4 அடி 3 அங்குலமான இச்சிலையானது கிரனைட் எனப்படும் கல்லினால் உருவாக்கப்பட்டது. இது எகிப்திய கலைச் சிறப்பைப் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கிமு 1333 முதல் கிமு 1324 வரை எகிப்தினை ஆண்டதாக கூறப்படும் துட்டன்காமன் மன்னனின் பாட்டனாரே மூன்றாம் அமெனோடெப் மன்னராவார்.
வரலாற்றுத் தகவல்களின் படி மூன்றாம் அமெனோடெப் மன்னரே எகிப்தில் பாரிய திட்டங்களை முன்னெடுத்தவராகக் கருதபடுகின்றார்.
மேலும் இவரது காலத்திலேயே எகிப்து தேசம் செல்வச் செழிப்போடு காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
தொல்பொருளியலாளர்கள் எகிப்தின் லக்ஸர் நகரத்தில் பெரிய கோவில் ஒன்றின் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment