Monday, September 27, 2010

மரணக் குழியிலிருந்து வாழ்தலுக்கான போராட்டம் - புதிய முயற்சி!


சிலியில் எதிர்பாராத விபத்தில் சிக்கிக்கொண்ட நிலக்கீழ் சுரங்கத்தொழிலாளர்களை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த இரு மாதகாலமாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களை மீட்கும்' சவாலான பணியின் அடுத்தகட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன.
நிலத்தின் கீழ் சுமார் 700 மீற்றர் ஆழத்தில் 33 சுரங்கத்தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். சிறிய குழாய் ஒன்றின் மூலம் அவர்களுக்கு தேவையான, உணவு தகவல் பரிமாற்றம் மட்டும் இடம்பெற்று வருகின்றன. அவர்களை பத்திரமாக வெளியில் கொண்டு வர மூன்று தொடக்கம் நான்கு மாதங்கள் எடுக்கும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், மனிதன் ஒருவன் உள்நுழையக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ள மற்றுமொரு புதிய குழாய் ஒன்றை நிலத்தின் கீழ் இறக்கும் முயற்சியில் சிலி அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்காக மூன்று சிறப்பு குழாய்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை அடுத்த வாரமளவில் நிலத்தின் கீழ் இறக்கப்படவுள்ளன. இக்குழாய்களை சுரங்கத்தொழிலாளிகள் அகப்பட்டுள்ள இடம் வரை கொண்டு செல்வதற்கு ஏற்ப நிலத்தில் துளையிடும் பணி தற்போது இடம்பெற்று வருகிறது. இப்புதிய நடவடிக்கைகளை, சிலியின் நிலச்சுரங்க அமைச்சர் லௌரென்ஸ் கொல்போர்ன் நேரில் சென்று பார்வையிட்டார்.
நிலத்தின் கீழ் சிறைப்பட்டிருக்கும் அந்தச் சுரங்கத் தொழிலாளர்களின் தற்போதைய வாழ்நிலையையும், எடுக்கப்படும் புதிய முயற்சினையும்  விளக்கும் படம் கீழே:

No comments:

Post a Comment