Monday, September 27, 2010

கேரளாவில் பிரபலநடன கலைஞர் ஹேமலதா புதிய கின்னஸ் சாதனை!


கேரளாவில் பிரபலநடன கலைஞர் ஹேமலதா தொடர்ந்து 115 மணி நேரம் நடனம் ஆடி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவர் பிரபல மோகினி ஆட்ட கலைஞர் ஆவார். திருச்சி பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் பரத நாட்டிய கலையில் பட்டம் பெற்ற இவர், திருச்சூரில் தொடர்ந்து 115 மணி நேரம் ஆடி இச்சாதனை படைத்துள்ளார்.
இதற்கு முன்னர் ஐதராபாத்தை சேர்ந்த பெண் ஒருவர் 108 மணி நேரம் ஆடி சாதனை புரிந்திருந்தார். அவரது சாதனையை ஹேமலதா முறியடித்துள்ளார். எனினும் இந்த சாதனையை நிகழ்த்திய பின்னர் ஹேமலதா மிகவும் சோர்வடைந்தமையினால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவர் கேரள மாநிலம் கலமண்டலம் என்ற ஊரை சேர்ந்தவராவார்.

No comments:

Post a Comment