Monday, September 20, 2010

புற்றுநோயாளிகளுக்கான ஐஸ்வர்யா ராயின் நடனம்

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயும், நடிகர் அக்ஷய் குமாரும் ஆடிப் பாடி மகிழ்வித்தனர்.

மும்பையில் உள்ள புற்றுநோயாளிகள் உதவிக் கழகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆடிப் பாடினார் ஐஸ்வர்யா. புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் அனைவரும் கை கொடுக்க வேண்டும் என்று அப்போது கோரிக்கை விடுத்தார் ஐஸ்வர்யா.

பின்னர் தனது படங்களிலிருந்து ஒலிக்கப்பட்ட பாடல்களுக்கு ஐஸ்வர்யா நடனம் ஆடினார். அவருடன் புற்றுநோயாளிகளும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர்.

நிகழ்ச்சியின்போது பேசிய நடிகர் அக்ஷ்ய் குமார், எனது தந்தைக்கு புற்றுநோய் இருந்தது. எனவே அதன் வலி எனக்குத் தெரியும் என்று கூறினார்.
 

No comments:

Post a Comment