Monday, September 20, 2010

பேர்முடாவை உலுக்கிய 'ஐகர்' சூறாவளி (காணொளி இணைப்பு)

பேர்முடாவில் நேற்று கடும் சூறாவளி வீசியது.

பெரும் மழையுடன் கூடிய இந்தச் சூறாவளியால் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்சார இணைப்புக் கம்பங்கள் வீழ்ந்தன.

மணிக்கு 120கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதற்கு 'ஐகர்' சூறாவளி எனப் பெயரிடப்பட்டுள்ளது.

அங்கு தொடரும் மோசமான கால நிலை காரணமாக சுமார் 230 மில்லி லீற்றர் வரை மழை பெய்யக் கூடுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாரிய கடல்அலைகள் எழலாம். இதனால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயமுள்ளதெனவும் எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

தற்போது 'ஐகர்' சூறாவளி வடகிழக்கு திசை நோக்கி நகர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய அமெரிக்காவின் தேசிய சூறாவளி மத்திய நிலையம் இதனை மிகவும் பாரிய சூறாவளியெனக் குறிப்பிட்டிருந்தது.

No comments:

Post a Comment