காமன் வெல்த் போட்டிகள் அக்டோபர் மூன்றாம் திகதி டெல்லியில் தொடங்குகிறது. எனினும் கடந்த சில வாரங்களாக, இந்தியாவில் இப்போட்டிகள் நடைபெறுவது பற்றிய எதிர்ப்பிரச்சாரமே வலுப்பெற்று வந்தது. போட்டி மைதானத்தில் குளறுபடிகள்,மேம்பாலம், கூரை இடிந்து வீழ்ந்தமை, தீவிர வாத தாக்குதல், விளையாட்டு வீரர்கள் விலகியமை, என எக்கச்சக்க குற்றச்சாட்டுகளை காமன்வெல்த் கமிட்டி எதிர்கொண்டது.
ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி, இப்போட்டிகளை திறம்பட நடத்திமுடிக்க டெல்லி தயாராகிவருகிறது. இந்நிலையில் தான் இப்பாடலின் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. பேஸ்புக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிடப்பட்ட சில மணித்தியாலங்களில் 5000 ற்கு மேற்பட்ட ரசிகர்களாள் 'லைக்' செய்யப்பட்டும், 1000 ற்கும் மேலான கருத்துப்பரிமாற்றங்களுடனும் உலகம் முழுக்க பயணிக்க தொடங்கியுள்ளது இப்பாடல்!
தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் அவரது ஜெய் ஹோ பாடலையும், வந்தே மாதரம் ஆல்பத்தில் இடம் பெற்ற மா துஜே சலாம் பாடலையும் பாடவிருக்கிறார் என தெரிவிக்கப்படுகிறது
No comments:
Post a Comment