Thursday, September 2, 2010

'பிளக்பெரி' சர்ச்சையால் கூகுள்,ஸ்கைப் தரவுகளில் பிரச்சினை

  இந்தியாவில் நிலவிய 'பிளக்பெரி' சர்ச்சையைத் தொடந்து கூகுள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் தரவுகள் தொடர்பில் புதிய பிரச்சினை எழுந்துள்ள்தாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

'பிளக்பெரி' கையடக்க தொலைபேசியில் நிலவும் பாதுகாப்பு குறைபாட்டினை இரண்டு மாதங்ளுக்குள் சரி செய்ய வேண்டுமென இந்திய மத்திய அரசு காலக்கேடு விதித்துள்ளது. 

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கூகுள் மற்றும் ஸ்கைப் ஆகியவற்றின் 'சேர்வர்'களை இந்தியாவில் அமைக்க வேண்டும் எனவும் அதனூடாக இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் அதன் தரவுகளை பரீசலிக்கக் கூடியதாக இருக்க வேண்டுமெனவும் இந்திய மத்திய பாதுகாப்புத்துறை செயலாளர் ஜீ.கே. பிள்ளை தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனமானது தனது ஜீ மெயில்ல் மின்னஞ்சல் சேவைகளுக்கு தரவுகளை பரிமாணம் செய்யும் அதி உயர் தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றது.

எனவே தான் இதனை அரசினால் பரீசீலிக்க முடியாத நிலை ஏற்படுகிறது. இதனையடுத்தே தீவிரவாதிகள் இதனைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. __

No comments:

Post a Comment