குடும்ப சூழல், அமைதியின்மை, மன அழுத்தம், சுயசார்பின்மை உட்பட பல்வேறு காரணங்களுக்காக பெண்கள் விவாகரத்து பெறுகின்றனர். ஆனால், கணவனைவிட மனைவி அதிகம் சம்பாதிப்பதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு, ஒத்துழைப்பின்மை, யார் உயர்ந்தவர் என்ற எண்ணங்கள் தொற்றி கொள்கின்றன. மேலும் இருவரின் சம்பளத்தை ஒப்பிட்டு உயர்வு தாழ்வு நிலையை சுட்டிக் காட்டுகின்றனர். இது ஒரு கட்டத்தில் எல்லை தாண்டும் போது விவாகரத்தில் முடிகிறது. இங்கிலாந்தில் 3ல் ஒரு பெண் ஆணைவிட அதிகமாக சம்பாதிக்கிறாள். நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு நிற்கும் பெண்களில் 38 சதவீதத்துக்கு மேற்பட்டவர்கள், கணவனைவிட அதிகம் சம்பாதிக்கும் பெண்களே. ஆனால், மனைவியை விட அதிகம் சம்பாதிக்கும் கணவன் உள்ள வீட்டில் இந்த பிரச்னை குறைவே என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. |
Sunday, September 12, 2010
அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் விவாகரத்து செய்வது அதிகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment