Tuesday, September 14, 2010

விசித்திர பறக்கும் பொருள் ஒன்றினால் சீன விமான நிலையத்தில் பரபரப்பு!

இனங்காணப்படாத பறக்கும் பொருள் ஒன்றினால் சீன விமான நிலையத்தில் வழமையான செயற்பாடுகளுக்குத் தடங்கல் ஏற்பட்ட சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவமானது சீனாவின் மங்கோலிய மாகாணத்திலுள்ள பவோடாவு விமான நிலையத்திலேயெ இடம்பெற்றுள்ளது.

இதனால் அவ்விமான நிலையப் பகுதி, பெரும் பரபரப்புக்குள்ளானதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

மேற்படி பொருளினை அவதானித்த விமான நிலைய அதிகாரிகள், அங்கு தரை இறங்கவிருந்த விமானங்களைப் பாதுகாப்பு காரணங்களுக்காக தரை இறங்கவும் அனுமதிக்கவில்லை.

பதிலாக அவ்விமானங்களில் சில வானத்தில் பயணத்தைத் தொடரும்படியும் மற்றவை அருகில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கும் படியும் பணிக்கப்பட்டன.

இந்த வருடத்தில் சீனாவில் தென்பட்டதாகக் கூறப்படும் மூன்றாவது இனங்காணப்படாத பறக்கும் பொருள் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இது தொடர்பாக உத்தியோகபூர்வ செய்தி எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த ஜூலை மாதம் சீனாவில் தென்பட்டதாகக் கூறப்படும் பறக்கும் பொருளொன்றின் காணொளி.

No comments:

Post a Comment