Monday, September 20, 2010

குழந்தை பேறின்மையை நிறைவேற்ற செயற்கை கர்ப்பப்பை

பெண்களுக்கு  கர்ப்பப்பையில் கோளாறு ஏற்பட்டால் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. தற்போது பெண்களுக்கு அதிக அளவில் கர்ப்பப்பை புற்று நோய் ஏற்படுகிறது.
அவர்களுக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இவர்களுக்கு உதவும் வகையில் விஞ்ஞானிகள் செயற்கை கர்ப்பபையை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். இதுதொடர்பாக அமெரிக்காவில் உள்ள புரோன் பல்கலைக்கழகம் மற்றும் பெண்கள்- குழந்தைகள் வைத்தியசாலை மருத்துவ விஞ்ஞானிகள் கூட்டாக ஆய்வு செய்து இதை உருவாக்கி உள்ளனர்.
உடல் தசையில் இருந்தே இதை உருவாக்கி இருக்கின்றனர். இதை பெண்கள் உடலில் பொருத்தி கருவை வளர்க்க முடியும். செயற்கை கர்ப்பபை வெற்றிகரமாக அமைந்தால் குழந்தை இல்லாத பெண்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

No comments:

Post a Comment