Sunday, September 5, 2010

நஞ்சருந்தி மயக்கமடைந்த நிலையில் காதல் ஜோடி மீட்பு

நஞ்சருந்தி தற்கொலைக்கு முயற்சித்த நிலையின் மயக்கமுற்றிருந்த காதல்ஜோடியொன்றை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த சம்பவமொன்று திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
முகத்துவாரம் தென்னந்தோப்பு பகுதியில் குறித்த காதல் ஜோடி மயக்கமுற்ற நிலையில் காணப்படுவதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.டி.ரணதுங்க தெரிவித்தார்.
திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவ்விருவரும், பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.
இதுபற்றி பிந்திக் கிடைத்த தகவல்கள் மூலம் தெரியவருவதாவது:
குறித்த காதல் ஜோடி முன்னாள் காதலர்கள் எனவும், காதலியான பெண்ணுக்கு பலவந்தமாக  வேறு நபரை திருமணம் முடித்து வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடி நஞ்சருந்தி திருக்கோவில் பிரதேச தென்னந் தோட்டத்தில் மயக்கமுற்ற நிலையில் இருந்துள்ளனர்.
இதையறிந்த  தோட்டத் தொழிலாளர் உடனடியாக பொலிஸாருக்கு கொடுத்த தகவலில் பொலிஸ் விரைந்து அந்த ஜோடிகளை அக்கரைப்பற்று மருத்துவமனைக்கு அனுமதித்து சிகிச்சைக்குட்படுத்தியிருந்தனர்.
தற்போது இருவரும் பிழைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment