Thursday, September 2, 2010

சூதாட்ட சர்ர்சை: 3 பாக். வீரர்கள் தொடரிலிருந்து நீக்கம்

 சூதாட்டப்புகாரில் சிக்கியுள்ள பாகிஸ்தான் வீரர்களான பாகிஸ்தான் அணியின் டெஸ்ட் தலைவர் சல்மான் பட், வேகப்பந்து வீச்சாளர்கள் மொகமட் அமீர், மொகமட் ஆசிப் ஆகியோர் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

இதனை பாகிஸ்தான் அணி மேலாளர் யவார் சயீத் இதனை உறுதி செய்துள்ளார். சூதாட்ட விவகாரத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த 3 வீரர்களையும் அணியிலிருந்து நீக்குமாறு தொடர்ந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு நெருக்கடி கொடுத்து வந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நிர்வாகம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

இந்த 3 வீரர்களும் பிரிட்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரியை, இஜாஜ் பட் முன்னிலையில் சந்திக்கவுள்ளனர். 

 

No comments:

Post a Comment