Tuesday, August 31, 2010

இஸ்ரேல், பலஸ்தீன் நேரடிப் பேச்சுவார்த்தை வாஷிங்டனில்: மஹ்மூத் அப்பாஸ், பெஞ்சமின் நெதன்யாஹு அமெரிக்கா பயணம்


இஸ்ரேல், பலஸ்தீனர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் இவ்வாரம் அமெரிக்காவில் ஆரம்பமாகவுள்ளன. இதை யடுத்து பலஸ்தீன ஜனாதிபதி மஃமுத் அப்பாஸ் இஸ்ரேல் பிரதமர் பென்ஜெமின் நெதன்யாஹு ஆகியோர் வாஷிங்டன் செல்ல வுள்ளனர். பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக் குமா என்கின்ற சந்தேகம் இரண்டு தரப்பினருக்குமிடையேயுள்ள நிலையில் இந்த நேரடிப் பேச்சுக்கள் ஆரம்பமாகவுள்ளன.
இதற்கு முன்னர் இரண்டு நாடுகளுக்கு மிடையே மறை முகமான பேச்சுக்கள் நடந்து வந்தன. இதை எகிப்தும் அமெ ரிக்காவும் இணைந்து ஏற் பாடு செய்தன. தற்போது ஆரம்பமாகவுள்ள நேரடிப் பேச்சுவார்த்தைகளின் எதிரொலிகள் இரண்டு தலைவர்களதும் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிப்பதாய் அமையும். அந்தளவுக்கு உள்ளூர் அழுத்தங்களைச் சுமந்தவண்ணம் இந்த தலைவர்கள் பேச்சுக்களில் பங்கேற்கவுள்ளனர்.
செவ் வாய்க்கிழமை தொடங்கவுள்ள இந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளில் யார் விட்டுக் கொடுப்புடன் நடந்துகொள்ளப் போகின்றனர் என்பது இதுவரைக்கும் தெரியவில்லை. ஆனால் இது தொடர்பாக இரு தரப்பார் சார்பாகவும் கருத்துக்கள் வெளியிடப் பட்டுள்ளன. இந்த அருமையான சந்தர்ப்பத்தை இஸ்ரேல் தவற விடக்கூடாது. சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு ஒரு வீதமளவு சந்தர்ப்பமிருந்தாலும் அதை நாங்கள் பற்றிப் பிடிப்போம் எனத் தெரிவித்தார்.
பலஸ்தீன ஜனாதிபதி மஃமூத் அப்பாஸ். பாதுகாப்பு, ஸ்திரத் தன்மை, பொருளாதாரம் என்பவற்றின் அடையாளங்களுக்கு மத்தி யில்தான் சமாதானத்தை அடையமுடியு மெனத் தான் நம்புவதாக இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். இவ்விடயத்தில் நிறைய சிக்கல்கள் உன்டென்பது எனக்குத் தெரியும்.
இப்பிரச்சினையின் வேறுபாடுகள் குறித்தும் நான் அறிவேன் ஆனால் பல ஸ்தீனர்களுக்கு வெளிச்சமூட்ட நான் விரும்பவில்லை இஸ்ரேலர்களை நோக்கி பலஸ்தீனர்கள் மனமுவந்துவர வேண்டும் இதிலே தான் ஆரம்பமாகவுள்ள பேச்சு வார்த்தைகளின் எதிர்காலம் தங்கியுள்ள தென்றும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார். அப்பாஸ¤ம், நெதன்யாஹுவும் சமாதானப் பாதைக்கு வெகு தொலைவிலுள்ளனர். இவர்களால் இப்பேச்சுவார்த்தையை வெற்றிக்கு இட்டுச் செல்ல முடியாதென அவதானிகள் தெரிவித்தனர்.
ஜெரூஸலத்தின் எதிர்காலம், மேற்குக் கரை மீள்குடியேற்றம் தொடர்பாக உத்தரவாதமளிக்கப்படாவிட்டால் நெதன் யாஹு அரசாங்கத்திலிருந்து வெளி யேறப் போவதாக சில கட்சிகள் எச்சரித் துள்ளன. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் எஹுட் பராக் இஸ்ரேலியர்களின் நலன் கள் பாதுகாக்கப்படவேண்டுமென்பதில் அக் கறையுடனுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் காஸா முற்றுகை தொடர்ந் தாலும், மீள்குடியேற்றம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டாலும் நேரடிப் பேச்சு வார்த்தைகளிலிருந்து வெளியேறுவேன் என்று மஹ்முத் அப்பாஸ் எச்சரித்துள்ளார். இவ்வாறான சூழலுக்கு மத்தியில் பேச்சு வார்த்தைகள் ஆரம்பமாகவுள்ளன.
அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்தே இஸ்ரேல், பலஸ்தீன தலைவர்கள் நேரடிப் பேச்சுக்கு இணங் கினரே தவிர உண்மையான மனதுடன் செல்லவில்லையென்பது இத் தலைவர்களின் அறிக்கைகளுடாகத் தெரிகின்றது.
இரு நாடுகளின் அடிப்படை விட யங்களில் தொடர்ந்தும் பிடிவாதமான போக்கைக் கடைப்பிடிப்பதே நீண்டகால இழுபறிக்கும் காரணமாகும்.

No comments:

Post a Comment