| மகிந்த நியுயோர்க் செல்லும் வேளையில் அங்கு எவரும் மகிந்தவின் வருகைக்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபடாதவாறு நடவடிக்கை எடுக்கும் படி அங்குள்ள சிறிலங்கா தூதுவரகத்துக்கு சிறிலங்கா வெளிவவிகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்றுவதற்காக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று அடுத்த மாதம் நியுயோர்க் செல்லவுள்ளது. இந்தக்குழுவில் அரசியல் தலைவர்கள் மற்றும் வர்த்தக பிரமுகர்கள் பலரும் இடம்பெறவுள்ளனர். சிறிலங்காவில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பாக அவர்கள் அமெரிக்க வர்த்தகர்கள் மற்றும் அரச அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளனர். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தின் பின்னர் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தனிப்பட்ட பயணமாக மெக்சிக்கோவுக்கும் ஜேர்மனிக்கும் செல்லவுள்ளார். ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் மகிந்த ராஜபக்ச எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 22ம் திகதி உரையாற்றவுள்ளார். சுமார் 150 உலகத்தலைவர்கள் இந்த மூன்று நாள் கூட்டதில் பங்குபற்றி உரையாற்றவுள்ளனர். கூட்டத்தின் முதலாவது நாள் பிரேசில்,அமெரிக்கா, சுவிற்சர்லாந்து , மலாவி, பாக்கிஸ்தான், கோஸ்ராறிக்கா போன்ற நாடுகளின் தலைவர்களுக்கு அடுத்ததாக சிறிலங்கா அதிபர் உரையாற்றவுள்ளார். அவர் தனது உரையில் உரையில் கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது குறித்தும் இறுதிப்போரில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பாக ஐ.நா நியமித்த நிபுணர்கள் குழு தொடர்பாகவும் குறிப்பிடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளை, சிறிலங்கா அதிபரின் நியுயோர்க் பயணத்தின் போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கும் என்று வெளிவிவகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மகிந்த ராஜபக்ச உரையாற்றவுள்ள நேரத்தில் ஐ.நாவுக்கு வெளியே எதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான அறிகுறிகள் உள்ளன. இதை புலிகளின் ஆரதரவாளர்களோ அல்லது தமிழர் அமைப்புக்களோ நடத்தப் போவதில்லை சிங்கள தேசியவாதி சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களே நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளனர். கடந்த வாரம் இவர்கள் ஏற்கனவே லொஸ்ஏஞ்சல் நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர். இதனையடுத்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அமெரிக்காவில் உள்ள சிறிலங்கா தூதரகத்தை பாதுகாப்பு நிலவரங்களை உன்னிப்பாக அவதானிக்குமாறும் நியுயோர்க்கிலுள்ள பௌத்த விகாரைக்கு மகிந்த செல்லும் போது குறிப்பிட்ட சிலருக்கே அனுமதி வழங்குமாறும் அறிவுறுத்தியுள்ளது. |
Monday, August 30, 2010
மகிந்தவுக்கு எதிராக அமெரிக்காவில் திரண்டெழப் போகும் சிங்களவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment