Monday, August 30, 2010

இங்கிலாந்தின் நிதி நெருக்கடி : 7 வயது சிறுவன் ஆலோசனை

இங்கிலாந்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க 7 வயது சிறுவன் ஆலோசனை வழங்கவுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் சிறுவயது கணித மேதையாக மதிக்கப்படும் ஆஸ்கர் செல்பி என்பவரே இவ்வாறு ஆலோசனை வழங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர் 'ஜெனரல் சர்டிபிகேட் ஒப் செகண்டரி எஜுகேஷன்' (ஜிசிஎஸ்ஈ) கணித தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார். சரே மாநிலம் எப்சம் நகரைச் சேர்ந்த இவர், ஸ்டேம்போர்ட் ஆரம்பப் பாடசாலையில் கல்வி கற்று வருகிறார்.
ஆஸ்கர், நிர்ணயிக்கப்பட்டதைவிட குறைந்த வயதிலேயே மேற்படித் தேர்வில் கலந்து கொண்டார். இதில் முதலிடம் பிடித்து சாதனையும் படைத்துள்ளார். இதனையடுத்தே இங்கிலாந்து அரசு, நிதித்துறை ஆலோசகராக இவரை நியமித்துள்ளது.
இதன்படி, நிதிநெருக்கடியைச் சமாளிப்பதற்கான ஆலோசனையை ஆஸ்கர் வழங்கவுள்ளார். இதற்கென வாரத்தில் ஒரு நாளை(சனிக்கிழமை) இவர் ஒதுக்கியுள்ளார்.
"அரசின் 12.46 லட்சம் கோடி 'பட்ஜெட்' பற்றாக்குறையை எப்படித் தீர்க்கப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு,
"வரி உயர்வு மற்றும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணமுடியும்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment