Tuesday, April 5, 2011

மட்டக்களப்பில் உள்ள வீடொன்றிலிருந்து 64 பாம்புக் குட்டிகள் மீட்பு!

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவிற்குட்பட்ட செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றினுள் இருந்து 64 நாக பாம்புக்குட்டிகள் பிடிக்கப்பட்டுள்ளன. 

செட்டிபாளையம் வைத்தியசாலை வீதியில் உள்ள கண்ணதாசன் என்பவரது வீட்டிலிருந்தே இன்று காலை இந்த நாகப்பாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

வீட்டிலிருந்து நாகப்பாம்பு ஓடுவதைக் கண்டு வீட்டை துப்பரவு செய்ததில் 64 பாம்புக்குட்டிகளை கண்டெடுத்துள்ளனர். 

இதனைக் கேள்வியுற்று பெருந்திரளான மக்கள் அதனை பார்வையிட செல்கின்றனர்.



No comments:

Post a Comment