நடமாடும் விபச்சார விடுதியில் இரண்டு விலைமாதர்கள் செயலாற்றியுள்ளதுடன் அவர்களுக்குப் பொறுப்பாக ஒரு முகாமையாளரும் இருந்துள்ளார். விலைமாதர்கள் ஒரு தடவைக்கு இரண்டாயிரம் ரூபாவுக்கு வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பதினோராம் திகதி கொழும்பு குற்றத்தடுப்பு பொலிசார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே நடமாடும் விபச்சார விடுதியும் அதில் இருந்தவர்களும் வெள்ளவத்தைப் பிரதேசத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள பெண்கள் வரக்காப்பொலை மற்றும் திருகோணமலை பிரதேசங்களைச் சோ்ந்தவர்கள் என்று பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்களை வைத்து நடமாடும் விடுதியை நடாத்திய முகாமையாளர் தெஹிவளை பிரதேச வாசி என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றில் நிறுத்தப்பட்டு, எதிர்வரும் 23ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment