Wednesday, December 29, 2010

நைஜர் காடுகளில் புதியவகைப் புலி

  எம்மில் பலரால் இதுவரை அறியப்படாததும், அழிந்து போயிருக்கலாம் என விஞ்ஞானிகளால் கருதப்பட்டு வந்ததுமான 'சஹரன் சீடா' எனப்படும் பூனைக்குடும்பத்தை சேர்ந்த புலி வகையொன்றின் புகைப்படத்தினை ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர். 

இப்புகைப்படங்களானது ஆபிரிக்க நாடான நைஜரிலேயே பிடிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்கள் பொருத்தப்பட்ட கமராவிற்கே இதன் புகைப்படம் அகப்பட்டுள்ளது. 

உலகில் இவ்வகைப் புலிகள் 250 வரையிலேயே காணப்படுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டுபிடிப்பதற்காக ஆராய்ச்சியாளர்கள் கடந்த 2000 ஆம் ஆண்டிலிருந்து முயன்று வந்தனர். 

இந்தப் புகைப்படங்கள் அவர்களின் தேடல்களுக்கு தற்போது புத்துயிர் அளித்துள்ளன.

No comments:

Post a Comment