குறிப்பாக 35 வயதைத் தாண்டியவர்கள் புகைப் பிடிக்கும் பழக்கும் வழக்கத்தைத் தொடர்ந்தால் கேடு பன்மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது.
புகைப்பழக்கம் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதை விரைவாக்குகிறது என்றும், அதிக கொலஸ்ட்ரால் உள்ள உணவுகளை உட்கொள்வதாலும், சோம்பிய வாழ்க்கைப் பழக்கத்தாலும் மாரடைப்பு ஏற்படுவது விரைவுபடுத்தப்படுவதாகத் தெரிகிறது.
புகைப்பழக்கத்தை நிறுத்தியவர்கள் தமனி அடைப்புகள் நீங்கி வாழ்நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உருவாவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது.
இந்த ஆய்வு குறித்த கருத்து தெரிவித்த புகைபிடிப்பவர் ஒருவர் "புகைக்காமல் வாழ்பவர்கள் அனைவரும் நீண்ட நாள் வாழ்கிறார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை" எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment