இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அவரது மனைவி கமிலா ஆகியோரை இந்திய பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு தலைவி பிரதீபா பட்டேல் ஆகியோர் நேரு விளையாட்டரங்கிற்கு அழைத்து வந்தனர்.
இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து, நாகதா குழுவினரின் ட்ரம்ஸ் இசை நிகழ்ச்சி நடந்தது. அதை தொடர்ந்து 'ஏரோஸ்டெட்' என பெயர் சூட்டப்பட்ட பிரமாண்ட பலூன் வலையம், நீலநிற ஒளியுடன் அரங்கின் மையத்தில், அந்தரத்தில் நிலைகொள்ளத்தொடங்கியது. ஹீலியம் அடைக்கப்பட்ட இப்பலூன், (இந்திய மதிப்பில் 400 மில்லியன் ரூபாய்) மைதானத்திலிருந்து 80 மீற்றர் உயரத்தில் மெதுவாக மிதக்கத்தொடங்கியதும், அரங்கமே ஒரு கணம் ஆச்சரியத்தில் உறைந்து போனது.
11 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இப்போட்டியின் இன்றைய இரண்டரை மணி நேர தொடக்க விழாவை இந்தியா முழுவதும் இருந்து ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து ரசித்தனர். 71 நாடுகளை சேர்ந்த 4,000 போட்டியாளர்கள் பங்கு பற்றும் இப்போட்டிகள் இரண்டாவது தடவையாக ஆசிய நாடொன்றில் நடத்தப்படுகிறது. 1998 ம் ஆண்டு கோலாலம்பூரில் இடம்பெற்றது. கடந்த முறை 2006 இல் மெல்போர்னில் நடைபெற்றது.
இதனை கௌரவப்படுத்து முகமாக இன்றைய தொடக்க நாள் நிகழ்வில், அஸ்திரேலியா விளையாட்டு வீரர்களே தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மைதானத்துக்கு முதலில் அணிவகுத்து வந்தனர்.
11 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ள இப்போட்டியின் இன்றைய இரண்டரை மணி நேர தொடக்க விழாவை இந்தியா முழுவதும் இருந்து ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் தொலைக்காட்சியில் நேரலையாக பார்த்து ரசித்தனர். 71 நாடுகளை சேர்ந்த 4,000 போட்டியாளர்கள் பங்கு பற்றும் இப்போட்டிகள் இரண்டாவது தடவையாக ஆசிய நாடொன்றில் நடத்தப்படுகிறது. 1998 ம் ஆண்டு கோலாலம்பூரில் இடம்பெற்றது. கடந்த முறை 2006 இல் மெல்போர்னில் நடைபெற்றது.
இதனை கௌரவப்படுத்து முகமாக இன்றைய தொடக்க நாள் நிகழ்வில், அஸ்திரேலியா விளையாட்டு வீரர்களே தமது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி மைதானத்துக்கு முதலில் அணிவகுத்து வந்தனர்.
-4தமிழ்மீடியாவிற்காக டெல்லியிலிருந்து சுஜித்ரா
படங்கள்:'AP'
காமன்வெல்த் போட்டிகள் 2010 இன் தொடக்கவிழா - கண்கவர் புகைப்படங்கள்
No comments:
Post a Comment