Wednesday, October 20, 2010

செக்ஸில் நாட்டமில்லாததால் பிரிட்டனில் பலர் விவாகரத்து

50 வயதுக்கு மேல் பாலியல் ரீதியான உறவில் நாட்டமில்லாததால் பிரிட்டனில் விவாகரத்து அதிகரித்துக் கொண்டு வருகிறதென திடுக்கிட வைக்கும் புள்ளி விபரங்கள் புதிய ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது.குழந்தைகள் பெரிதாகும் போது தம்பதிகளுக்குள் உள்ள நெருக்கம் குறைவதே இது போன்ற முடிவுகளுக்கு பெரும்பாலும் காரணமாக அமைந்து விடுகிறது என்பதும் புள்ளிவிபரங்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பாக 50 வயதிற்கு மேற்பட்ட 1900 விவாகரத்தாகும் தம்பதிகளிடையே நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 28 விழுக்காடு பெண்கள் தங்கள் கணவரின் உணர்வுகளைக் குறை கூறுகின்றனர்.

மேலும் 27 சதவீதத்தினர் பொறுப்புக்கள் குறைந்து விடுவதால் இந்த நிலை ஏற்படுவதாகவும் 25 விழுக்காட்டினர் உடலுறவில் நாட்டம் குறைவதையும் சுட்டிக் காட்டியுள்ளனர்.

கடந்த வருடம் பிரிட்டனில் 50 வயதுக்கு மேல் விவாகரத்தானவர்களின் எண்ணிக்கை 22,000 என தேசிய புள்ளி விபர அலுவலகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment