Wednesday, October 20, 2010

பர்தாவுக்கு தடை விதிக்க வேண்டும்: சிவசேனா கோரிக்கை

இஸ்லாமிய பெண்கள் அணியும் பர்தாவுக்கு தடை விதிக்கவேண்டும் என சிவசேனை கோரிக்கை விடுத்துள்ளது.
கட்சியின் பிரசார ஏடான சாம்னாவில் இது தொடர்பான தலையங்கம் செவ்வாய்க்கிழமை வெளிவந்துள்ளது. குழந்தைகளை திருட பர்தா அணிவது பயன்படுத்தப்பட்டால் சட்டப்படி அதை தடை செய்வதே சரியானதாக இருக்கும்.

பர்தாவுக்கு பிரெஞ்சு அரசு தடை விதித்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த விஷயத்தில் பிரெஞ்சு அதிபர் எடுத்துள்ள முடிவு புரட்சிகரமானது.

துருக்கியிலும் கமால் பாஷா, பர்தாவுக்கு தடை விதித்தார். இந்தியாவில் மட்டும் ஏன் இந்த நிலை என்று சாம்னா பத்திரிகையில் வெளியான தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மும்பை மருத்துவமனை ஒன்றிலிருந்து 2 மாத குழந்தை அக்டோபர் 15 தேதி திருடு போனது. இந்த சம்பவத்துக்கு பர்தா அணிந்த மர்ம பெண் காரணம் என சந்தேகிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment