லாஸ் ஏஞ்ஜெல்ஸ் தெருவில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கைப்பையை பறித்துச் செல்ல திட்டமிட்ட திருட்டு ரௌடி ஒருவன் திடிரென அந்த பெண்மணியை சரமாரியாகத் தாக்கியதுடன் தெருவில் வெனிஸ் கடற்கரை வரை இழுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் திருடனால் அந்த பெண்மணியின் கைப்பையை எடுக்க முடியவில்லை.
இறுதி வரை திருட்டு கும்பலுடன் போராடி தன் கைப்பையை பறி கொடுக்காமல் தப்பித்துள்ளார் அந்தப் பெண். பெண்மணியிடம் கைப்பையை பறிக்க முடியாமல் ஓட்டம் பிடித்துள்ளான் திருடன்.
இந்தக் காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வி காமெராவில் பதிவாகியுள்ளது. பெண்மணியின் இந்த வீரச் செயல் அமெரிக்கா ஊடங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.
அப்படி என்ன அந்த கைப்பையில் இருந்தது என ஊடகங்கள் விசாரித்த போது பெண்மணி ஒரு குழந்தையின் தாய் என்பதும் இவரின் குழந்தை 10 வாரங்களுக்கு முன்னர் புற்றுநோயால் இறந்து விட்டதும் தெரிய வந்துள்ளது.
குழந்தை மம்மி என கூப்பிட்டதை ஒலிப்பதிவு செய்து தன் கைபேசியில் வைத்துள்ளதாகவும் அதை காப்பாற்றவே இறுதிவரை போராடியதாகவும் கூறுகிறார் தாய். தாயின் இந்த வீரச் செயல் கண்டு நெகிழ்ந்து போயுள்ளனர் மக்கள்.
No comments:
Post a Comment