அடோல்ஃப் ஹிட்லர் இதுவரை உலகில் வாழ்ந்த மிகக் கொடூரமான சர்வாதிகாரியாகக் கருதப்படுபவர். அவரின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகவே கருதப்பட்டது.
எனினும் அவரின் வாழ்க்கையின் மறுபக்கத்தைப் பிரதிபலிக்கும் புகைப்படங்கள் சில தற்போது வெளியாகியுள்ளன.
இப்புகைப்படங்கள் 1936 முதல் 1945 ஆம் ஆண்டுகாலப் பகுதிக்குட்பட்டவையெனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இப் புகைப்படங்கள் ஹிட்லர் தேநீர் அருந்துவது, பெண்களின் மத்தியில் புன்சிரிப்புடன் அமர்ந்திருப்பது, பெண் ஒருவருடன் உரையாடுவது, தனது பிறந்த நாள் பரிசான காரை ரசிப்பது போன்றவற்றை பிரதிபலிக்கின்றன.
இப்புகைப்படங்கள் ஹியுகோ ஜெகர் என்பவரால் பிடிக்கப்பட்டவை.இவர் மட்டுமே ஹிட்லரின் அந்தரங்க வாழ்க்கை சம்பந்தப்பட்ட புகைப்படங்களை எடுக்க அனுமதிக்கப்பட்டவர். மேலும் இவர் மட்டுமே அக்காலப்பகுதியில் வண்ணப் புகைப்படங்களை எடுக்கும் படப்பிடிப்பாளராக இருந்தவர்.
மேற்படிப் புகைப்படங்களை வங்கியொன்றில் பத்திரப்படுத்தி வைத்திருந்த அவர், 1965 ஆம் ஆண்டு அவற்றை 'லைப்' சஞ்சிகைக்கு விற்பனை செய்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment