Monday, September 20, 2010

லூசர்னில் உயரமான கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் பலி

லூசர்னில் உயரமான கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
லூசர்னில் உள்ள இரவுநேர கேளிக்கை விடுதியொன்றிலிருந்து விழுந்த இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
12 மீற்றர் உயரமான கட்டடமொன்றிலிருந்து வீழ்ந்த 21 வயது சுவிஸ் இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
புகைப்பிடிப்பதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பிரதேசத்திலிருந்து தவறி வீழ்ந்தத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த சம்பவம் குறித்து அந்நாட்டு காவல்துறையினர் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment